Skip to main content

பேரம் தொடங்கியது... தலைக்கு 50 சி... கர்நாடக பரபரப்பு

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
kumaraswamy yeddyurappa


கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கையான 113 பெறவில்லை. 104 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலையில் மேலும் தேவைப்படுவது 9 எம்எல்ஏக்கள்தான். பாஜகவின் மிகப்பெரிய நம்பிக்கையாக கருதப்பட்டது கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது. அதற்கு காரணம் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் முழுக்க பாஜகவின் ஆட்சி அதிகாரத்திற்குள் வந்தபோதும், தென்னிந்தியாவான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் பாஜக நுழைய முடியவில்லை. 
 

ஏற்கனவே கர்நாடகாவில் சில மாதங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் இந்த தேர்தலில் தனது கணக்கை தென் மாநிலத்தில் துவங்க கர்நாடகாதான் வாசல் கதவு என நம்பி, இதற்காக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா முதற்கொண்டு பிரதமர் மோடி என பெரிய பட்டாளமே ஒரு மாதமாக கர்நாடகாவில் முகாமிட்டு பல்வேறு வேலைகளை செய்து வந்தனர். ஆனால் எல்லாமே பிரயோஜனம் இல்லாமல் போகுமளவுக்கு அதிகாரம் கையில் கிடைக்க வழியில்லாத நிலை உருவாகிவிட்டது. இதனை விடக்கூடாது என, இதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் பாஜக இறங்க வேண்டும் என டெல்லியில் இருந்து அறிவிப்பு வர, பேர பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கிறது. 
 

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற 37 பேரில் 15 பேரை வளைக்க பலகட்ட முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். இதன்படி ஒரு எம்எல்ஏவின் தலைக்கு 50 சி என தொடக்க பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக போய்கொண்டிருக்கிறது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் 37 பேரில் 3ல் ஒரு பங்கு இழுத்துவிட்டால் அவர்களை தனிக்கட்சியாக்கி, பாஜகவுக்கு ஆதரவு நிலையை ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்துள்ளது. அதற்காகவே பாஜக முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடியூரப்பா கர்நாடக ஆளுநர் வஜ்ஜிபாய் வாலாவை சந்தித்து பெரும்பாண்மை பலன் எங்களுக்கே உள்ளது. இரண்டு நாள் கொடுங்கள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். 
 

மஜத தலைமை 50 சி என்ன ஆயிரம் சி பேசினாலும் எங்கள் 38  பேரில் ஒருவர் கூட மைனஸ் ஆக மாட்டோம் என்று உறுதியாக உள்ளது. பாஜக போட்டள்ள தூண்டிலில் மீன் சிக்குமா? சிக்காதா? என்பது கர்நாடகா முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயகம் வென்றது! - கர்நாடகாவிற்கு வாழ்த்து தெரிவித்த மம்தா

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் வென்றதாக மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

mamata

 

கர்நாடக சட்டசபைத் தேர்தலை அடுத்து அங்கு நிலவிவந்த பரபரப்பான அரசியல் சூழல் தற்போது தணிந்திருக்கிறது. உள்நோக்கத்துடன் செயல்பட்ட ஆளுநர் வஜூபாய், ஜனநாயகத்தைக் கொன்று ஆட்சியமைத்த எடியூரப்பா, உச்சநீதிமன்றத்தால் குட்டப்பட்ட தற்காலிக சபாநாயகர் போபையா என காங்கிரஸ் முன்வைத்த அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கயிருந்தது. 

 

மாலை 3.30 மணி முதல் சபையில் பேசிய முதல்வர் எடியூரப்பா, அம்பேத்கரின் 150ஆவது பிறந்த தினத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தன்னை முதல்வர் வேட்பாளராக நியமித்தனர். விவசாயக் கடன்களை ரத்து செய்ததைப் போல ஏழை, எளிய மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருப்பேன். காங்கிரஸ் கட்சியினர் தங்களது எம்.எல்.ஏ.க்களையே நம்பவில்லை. அவர்களது குடும்பத்தினருடன் பேசவிடாமல், அவர்களை அடைத்து வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து தனக்கு பெரும்பான்மை இல்லாததை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

 

 

இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ம.த.ஜ. கூட்டணி ஆட்சியமைக்கிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்கம் மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவிற்கு எனது வாழ்த்துகள். தேவ கவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இது பிராந்திய முன்னணியின் மகத்தான வெற்றி’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

Next Story

56 மணிநேரம் மட்டுமே முதல்வர்! - ராஜினாமா செய்தார் எடியூரப்பா

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

yeddy

 

கர்நாடக சட்டசபையில் இன்று காலை எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம் தொடங்கியது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்தது.

 

இந்நிலையில், இன்று காலை முதல் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவி பிரமாணம் முடிவடைந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாலை 3.30 மணி முதல் பேசத் தொடங்கினார். அவர் தனது உரையில், அம்பேத்கரின் 150ஆவது பிறந்த தினத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை முதல்வர் வேட்பாளராக நியமித்தனர். விவசாயக் கடன்களை ரத்து செய்ததைப் போல ஏழை, எளிய மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருப்பேன். காங்கிரஸ் கட்சியினர் தங்களது எம்.எல்.ஏ.க்களையே நம்பவில்லை. அவர்களது குடும்பத்தினருடன் பேசவிடாமல், அவர்களை அடைத்து வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறுகிறோம் என்பது முக்கியமில்லை. மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியம் எனவும் அவர் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு, அவையை விட்டு வெளியேறினார். பா.ஜ.க. 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், ஆட்சியமைக்க ஆளுநர் எடியூரப்பாவை அழைத்திருந்தார். தற்போது தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க அவர் ராஜ்பவனுக்கு சென்றுள்ளார்.