Skip to main content

ஓ.பி.எஸ் பக்கம் நிற்கும் தொண்டர்கள்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

ADMK Members standing on the OPS side!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஜக தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்காக ஓ.பி.எஸ். டெல்லி சென்றுவிட்டு திரும்பினார். 

 

இந்த நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், “ஒருங்கிணைப்பாளர் டெல்லியில் இருந்து வந்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்திக்க இருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்துதான் ஓ.பி.எஸ். தனது முதல் சுற்றுப் பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த 26ம் தேதி  சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஓ.பி.எஸ்-க்கு முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டு தாரை தப்பட்டையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

 

அதைத் தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு உசிலம்பட்டியில் அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் வரவேற்பு கொடுத்தனர். அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சொந்த ஊரான தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதிக்கு வந்த ஓ.பி.எஸ் அங்குள்ள சாஸ்தா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகரம், ஒன்றியம் மற்றும் பேரூர் அதிமுக சார்பில் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக் கணக்கானோர் கணவாய் பகுதிக்கு வந்தனர். மாலை அணி வித்தும், பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். 

 

ADMK Members standing on the OPS side!

 

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர், தனது குழந்தையை கொடுத்து பெயர் வைக்கச் சொன்னார். கட்சிப் பொறுப்பாளர் ஒருவர், செங்கோல் வாளை ஓபிஎஸ்-க்கு கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, தேனிக்கு புறப்பட்டார் ஓ.பி.எஸ். அப்போது மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாக தேனி மாவட்ட பாஜக தலைவர் பாண்டியன் தலைமையிலான பி.ஜே.பி.னர் துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர். ஓபிஎஸ் வருவதை கண்டு வரவேற்று காவி துண்டை அணிவித்தனர். அப்போது, ‘நாங்க எப்பவும் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்’ என்றார். அதற்கு ஒபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் நன்றி தெரிவித்தவுடனே ஓ.பி.எஸ் தனது கழுத்தில் இருந்த காவி துண்டை டென்ஷன்னுடனே தானே எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

 

ADMK Members standing on the OPS side!

 

அதன் பின்னர் கண்டமனூர் விலக்கு வழியாக தேனி வந்த ஓ.பி‌.எஸ்-க்கு பங்களாமேடு, நேரு சிலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் எதிர்பார்த்த அளவு ஆதரவாளர்களும் தொண்டர்களும் இல்லை. காரணம் தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், அவரது ஆதரவாளர்களுடன் இ.பி.எஸ் அணிக்கு சென்றதால் தேனி நகரத்திலும், அல்லிநகரத்திலும் ஒபிஎஸ்-க்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. 


பின்னர் அல்லிநகரம், லட்சுமிபுரம் வழியாக சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்த ஓ.பி.எஸ்-க்கு பெருந்திரளான தொண்டர்களும் ஆதரவாளர்களும் வரவேற்பு கொடுத்து மாலை சால்வைகளை கொடுத்தனர். அங்கிருந்து ஓ.ராஜா வீட்டுக்கு சென்றுவிட்டு, தனது வீட்டுக்கு சென்றார். அ.தி.மு.க.விலிருந்து ஓ. ராஜா நீக்கப்பட்டிருந்தும் ஆண்டிபட்டி கனவாலிருந்து தொடர்ந்து ஓ.பி.எஸ் பின்னாடியே ஓ. ராஜா வந்தார். 


எடப்பாடி ஆதரவாளர்கள் மூலம் ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்பட்டு இருந்தாலும், அதிமுக கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஓ.பி.எஸ்.க்கு செல்வாக்கு இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.