Skip to main content

மிரட்டும் டிட்லி புயல்!!!

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
odisha


இன்று ஒடிஷா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் டிட்லி புயல் கடக்கின்றது என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. அறிவித்திருந்ததை போலவே, 140-150கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கின்றது. ஒடிஷா மாநிலத்திலுள்ள கோபால்பூரில் ஒரு மணி நேரத்திற்கு 102 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
 

இதன் காரணமாக ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சம் பேர் நேற்று இரவில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 1000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. மொத்தம் 836 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

டிட்லி புயல் பாதிப்புக்கு ரூ. 1200கோடி வேண்டும்- மோடிக்கு கடிதம்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
chandra


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிட்லி புயல் ஆந்திரா மற்றும் ஒடிஷா வழியாக மேற்கு வங்கம் நோக்கி கரையை கடந்தது. அப்போது சுறாவளி காற்று மிக வேகமாக வீசியது. சுமார் 126 கிமீ வேகம் வரை வீசியதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த அதிவேக காற்றினால், இந்த இரு மாநிலங்களிலும் பல மரங்கள், மின் கம்பங்கள், கீழே சாய்ந்தது. தங்களின் வீட்டை விட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
 

இந்நிலையில், ஆந்திராவில் டிட்லி புயல் பாதிப்புக்கு நிதி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி, அனுப்பியுள்ளார். டிட்லி புயல் பாதிப்பை சீர் செய்ய முதற்கட்டமாக ரூ.1200 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

டிட்லி புயலால் பலத்த சேதம்...10 பேர் பலி...

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
titli cyclone


நேற்று ஒடிஷா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் நோக்கி டிட்லி புயல் நகர்ந்தது. அப்போது புயல் காற்று கடுமையான வேகத்தில் வீசியது. நேற்று காலை சுமார் 126 கிமீ வேகத்தில் புயல் வீசியது. இதனால் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகாகுளம், விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மாமரங்கள், தென்னைமரங்கள் வேரோடு சாய்ந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 13 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவை போன்று ஒடிசாவில் ‘டிட்லி’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

நேற்றுவரை வெளியான தகவலிபடி இந்த புயலுக்கு எட்டு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அங்கு புயலால் பத்து பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பலர் வீட்ட விட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் புயலால் பாதிப்புள்ளான ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்துள்ளார்.