Skip to main content

மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு... கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு...

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

punjab extends lockdown

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பஞ்சாப் மாநிலத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார். 


இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,000 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே 3- ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க முதல்வர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, மே 3- ஆம் தேதிக்குப் பின்னரும் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த இரு வாரங்களுக்கு ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், இந்தக் காலகட்டத்தில் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்