Skip to main content

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

polio camp postponed union health and family welfare announced

நாடு முழுவதும் ஜனவரி 17- ஆம் தேதி நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், "நாடு முழுவதும் ஜனவரி 17- ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16- ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்