Skip to main content

தகவல் பாதுகாப்பிற்கு கடுமையான சட்டம் - பிரதமர் மோடி தகவல்!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

pm modi

 

உலக பொருளாதார மன்ற மாநாட்டில், நேற்று (28.01.2021) இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, கரோனா தடுப்பூசியை அனுப்புவதன் மூலம் பல நாடுகளில் உள்ள மக்களின் உயிரை இந்தியா காப்பாற்றுகிறது எனவும், இந்தியாவில் தகவல் பாதுகாப்பிற்குக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

 

பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:


"130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் சார்பாக, இந்த உலகத்திற்கான நம்பிக்கை, நேர்மறை செய்தியுடன் நான் உங்கள் முன் வந்துள்ளேன். வெறும் 12 நாட்களில், இந்தியா 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், 300 மில்லியன் முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான எங்கள் இலக்கை அடைவோம். இப்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்னும் பல தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து வரும் என்பதை அறிவதன் மூலம் உலகப் பொருளாதார மன்றம் நிம்மதி பெறும். இந்த கடினமான காலக்கட்டத்தில், இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது. கரோனா தடுப்பூசிகளை அனுப்புவதன் மூலமும், தடுப்பூசிக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களின் உயிரை இந்தியா காப்பாற்றுகிறது.

 

இந்த தசாப்தத்தில் பொருளாதாரத்தை உயர்த்த, இந்தியா ஒன்றன்பின் ஒன்றாக சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது. இந்தச் சீர்திருத்தங்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டன. சந்தை பங்கேற்பிற்காக அனைத்து துறைகளையும் திறப்பதை நாங்கள் நம்புகிறோம். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட எல்லா முன்னணி தொழில்நுட்பங்களிலும் முதலீட்டை ஊக்குவிக்கிறோம். நாட்டில் தகவல் பாதுகாப்பு தொடர்பான கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன."


இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேள்வி கேட்ட பத்திரிகையாளர் - தக் லைப் செய்த பிரகாஷ் ராஜ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

prakash raj about modi latest

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

 

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி குறித்து பிரகாஷ் ராஜ் பேசியிருக்கும் வீடியோ பலராலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த நேர்காணலில் பிரகாஷ் ராஜிடம், “நீங்களும், நடிகர் கமல்ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்று இருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

 

இதற்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், “மோடி இருக்கிறார். அவர் சிறந்த நடிகர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், மிகச்சிறந்த பேச்சாளர், காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறார்” என்றுள்ளார். 

 

 

 


 

Next Story

"நேர்மையான பாதைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்" - பிரதமருக்கு விஷால் நன்றி

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

vishal thanked pm modi for mark antony hindi release issue

 

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (28.09.2023) முதல் இந்தியில் வெளியாகியுள்ளது. 

 

இதையடுத்து தணிக்கை வாரிய குழுவில் ஊழல் நடப்பதாக விஷால் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரையில் ஊழலை காட்டுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் நடப்பது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது. எனது மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். 

 

படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? வாய்ப்பே இல்லை. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியது. 

 

இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் விஷால் குற்றச்சாட்டுக்கு, "தணிக்கை குழுவின் மேல் விஷால் வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு மிகவும் துரதிருஷ்டவசமானது. ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது, இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டிருந்தது. 

 

இந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த ஊழல் தொடர்பாக  உடனடி நடவடிக்கைகள் எடுத்ததற்காக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நன்றி. ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும், தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 

எனது பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்த முயற்சியை உடனடியாக வெளிக்கொணர்வதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி. ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தி உணர்வைத் தருகிறது, ஜெய் ஹிந்த்" என குறிப்பிட்டுள்ளார்.