Skip to main content

பிரதமர் மோடி பிறந்தநாள்; கரோனா தடுப்பூசி செலுத்துதலில் புதிய சாதனை!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

pm modi

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமரின் பிறந்தநாளையொட்டி இன்று அதிக கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதன்படியே இன்று மாலை 5.15 மணியளவில் சுமார் 2 கோடியே 34 ஆயிரத்து 207 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

கரோனா தடுப்பூசி செலுத்துதலில் இதுவொரு புதிய சாதனை. ஒரேநாளில் இந்தியாவில் இரண்டு கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஒரேநாளில் இரண்டு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட  சாதனையை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் சுகாதார பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மேலும் இந்த சாதனைக்காக மன்சுக் மாண்டவியா சுகாதார பணியாளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்