Skip to main content

புதிய நாடாளுமன்ற கட்டட வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

new parliament building supreme court judgement

 

புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (05/01/2021) தீர்ப்பளிக்கிறது. 

 

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இருப்பதாக ராஜீவ் சூரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு இன்று (05/01/2021) உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது. அனைத்து வாதங்களையும் கேட்ட பின்னர், இன்றே தீர்ப்பும் வழங்கப்படுகிறது. 

 

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்