Skip to main content

மும்பையில் விமான விபத்து நூலிழையில் தவிர்ப்பு!! 

Published on 08/08/2020 | Edited on 08/08/2020
mumbai airport incident

 

துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து 2 விமானிகள் உட்பட 18 பேர் என உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

இந்த விபத்து சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மும்பையில் விமான விபத்து விமானியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது. பறவை மோதியதை  தொடர்ந்து விமானி உடனே சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் நூலிழையில் பயணிகள் உயிர் தப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்