Skip to main content

கோத்தபய ராஜபக்சேவிற்கு டெல்லியில் வரவேற்பு... கைகுலுக்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

இந்தியா வந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு டெல்லியில் உள்ள இந்திய குடியரசு மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் 7-வது அதிபராக பதவி ஏற்றார். அதனையடுத்து இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டார். 

 

Modi welcomes Gotabhaya Rajapakse in Delhi ...

 

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜபக்சே குடும்பத்தில் ஒருவரான கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வந்தார். இந்திய குடியரசு மாளிகையில் அவரை பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கைகுலுக்கி வரவேற்றனர். வருகை தந்த கோத்தபய ராஜபக்சேவிற்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையை கொடுக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்