Skip to main content

மழையால் நிறுத்தப்பட்ட போட்டி!கடுப்பில் தோனி செய்த செயல்!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

நேற்று இந்தியா,நியூசிலாந்து அணிகளுக்கான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருந்த இந்த போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆட்டம் மழையால் போட்டி ஆரம்பிக்காமலேயே ரத்து செய்யப்பட்து.இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.



தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.இந்நிலையில், மழையால் போட்டி நடைபெறவில்லை என்ற சோகத்தில் இந்திய வீரர்கள் அமைந்திருக்க, தோனி கண்ணை மூடிக்கொண்டு மல்லாக்க படுத்து தூங்கி கொண்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்