Skip to main content

'குண்டாஸ்' வங்கத்தை ஆள மாட்டார்கள்" - மம்தா பானர்ஜி!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

MANOJ TIWARI

 

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையோட்டி வார்த்தை போர், சிபிஐ விசாரணை, குண்டு வீச்சு சம்பவம் என அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில் ‘மண்ணின் மகள்’ கோஷத்தோடு, தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள மம்தா பானர்ஜியின் தலைமையில் இன்று (24.02.2021) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "மோடி மேற்கு வங்கத்தை ஆளமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வங்கமே வங்கத்தை ஆளும். குஜராத் வங்கத்தை ஆளாது. மோடி வங்கத்தை ஆள மாட்டார். 'குண்டாஸ்' (குற்றவாளிகள்) வங்காளத்தை ஆள மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

 

இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டுப் பிரபலங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியப் பிரபலங்கள் ட்வீட் செய்தபோது, இந்தியப் பிரபலங்களை விமர்சிக்கும் வகையில் மனோஜ் திவாரி ட்விட்டரில் கருத்துக்களைப் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்