![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/Yzb1vueWpYFJv7bpNqNrUuBdU-JkgJF_bM3eWN28yV8/1544803542/sites/default/files/inline-images/Venugopal.jpg)
சபாிமலை விவகாரத்தில் பா.ஜ.க தொண்டா் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து கேரளாவில் இன்று பா.ஜ.க சாா்பில் பந்த் நடைபெற்றது.
அனைத்து வயது பெண்களும் சபாிமலையில் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீா்ப்பை தொடா்ந்து கேரளாவில் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் சபாிமலை, நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் பத்தணம்திட்ட மாவட்ட நிா்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கேரளா பா.ஜ.க பொதுச்செயலாளா் ராதாகிருஷ்ணன் கடந்த 3-ம் தேதியில் இருந்து திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் தொடா் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் அவாின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போலிசாா் அவரை கைது செய்து அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா்.
இதனை தொடா்ந்து அவருக்கு பதில் பா.ஜ.க முன்னால் தலைவா் பத்மநாபன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளாா். இவருக்கு ஆதரவாக பா.ஜ.க வினா் பலா் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனா். இந்தநிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திடீரென்று பா.ஜ.க தொண்டா் வேணு கோபாலன், "சாமியே சரணம் அய்யப்பா" என்ற கோஷத்துடன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டாா். இதனால் அதிா்ச்சியடைந்த பா.ஜ.க வினா் தண்ணீரை விட்டு தீயை அணைக்க முயல்வதற்குள் அவாின் உடல் முமுவதும் தீ கொளுந்து விட்டு எாிந்தது.
பின்னா் அவரை அரசு மருத்துவ கல்லூாி மருத்துமனைக்கு கொண்டு சென்றும் அவா் சிகிச்சை பலனளிக்காமல் பாிதாபமாக இறந்தாா். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடா்ந்து இன்று கேரளாவில் முமு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்ததையடுத்து அங்கு பந்த் நடந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முமுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கேரளா போலிசாா் தீக்குளித்து இறந்த வேணு கோபால் பா.ஜ.க தொண்டா் இல்லையென்றும் அவா் ஓரு மனநிலை பாதிக்கப்பட்டவா். பா.ஜ.க வினாின் உற்சாக தூண்டுதலால் தான் அவா் தற்கொலை செய்து கொண்டாா் என்று போலிசாா் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளனா்.