Skip to main content

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டம்!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ, 35A ரத்து செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

JAMMU KASHMIR ISSUE PAKISTAN HIGH COMMISSION RETURN

 

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள பொறுப்பு தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டம். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதர் வரும் 16- ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்