Skip to main content

கேரளாவில் நிலச்சரிவு... உயிரிழப்பு 14 ஆக உயர்வு 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
 Landslide in Kerala .

 

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு.  பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில்  தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை என்ற வெளியான நிலையில், நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக இன்று காலையில் மீட்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12  பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. 

குடியிருப்பில் இருந்த 80 பேர் காணாமல் போயுள்ளனர். அதேபோல் அந்த குடியிருப்பில் இருந்தவர்களில் சிலர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சார்ந்த செய்திகள்