Published on 14/08/2019 | Edited on 14/08/2019
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு சுதந்திர தினமான நாளை வீர் சக்ரா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. சென்னையை சேர்ந்த அபிநந்தன் கடந்த பிப்ரவரி மாதம் 27- ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தனார்.
![indian air force wing commander abhinandan varthaman vir chakra award on independence day](http://image.nakkheeran.in/cdn/farfuture/CbpDlDbXkWrz-T8ySI1YfLn_YptQscVDi_9ciasePHQ/1565759887/sites/default/files/inline-images/abinanthan.png)
இந்த வீர தீர செயலை பாராட்டி மத்திய அரசு விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது. பாலக்கோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டார் அபிநந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.