Skip to main content

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உருக்கம்!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

2014- ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக  பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் பதவி வகித்தார். இவர் பதவி வகித்த நாட்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைளை எடுத்தார். அதில் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கென்று பிரத்யேக கணக்குகளை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டரில் தொடங்கினார். அந்த கணக்குகளை நிர்வகிக்க அதிகாரிகளையும் நியமனம் செய்தார். இதன் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது பணிபுரியும் இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடனடியாக சமூக வலைதளப்பக்கங்கள் மூலம்  இந்திய வெளியுறவு துறைக்கு தகவல் அனுப்பினால் போதும் 24 நேரத்தில் தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கையை சுஷ்மா சுவராஜ் நேரடியாகவும், தூதரக அதிகாரிகள் மூலமும் மேற்கொண்டார்.

 

 

susma suwaraj

 

 

இதனால் உலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை பாராட்டினர். ஏனெனில் எந்த நேரத்தில் புகார் வந்தாலும் அதை பகல் இரவு பாராமல் உரிய நபர்களுக்கு உடனடி தீர்வை பெற்று தந்துள்ளார் என்றால் எவராலும் மறுக்க முடியாது. மத்திய அமைச்சரவையில் மிக சிறப்பாக, மக்கள் எளிதில் சந்திக்க கூடிய வகையில் அமைச்சகத்தை செயல்பட  வைத்தவர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 2014-2019 ஆண்டுகளில் மக்களுக்காக 24*7 இயங்கிய அமைச்சகம், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஆகும். அதே போல் சுஷ்மா சுவராஜுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் வெளியுறவு துறை அதிகாரிகளும் சிறப்பாக பணியற்றினர். இந்நிலையில் நேற்று பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் இடம் பெறவில்லை.

 

 

susma

 

 

இதற்கு காரணம் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால அமைச்சரவையில் இடம் பெற விருப்பமில்லை என பிரதமரிடம் தெரிவித்து, தனது அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கரை  பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து வெளியுறவு துறை அமைச்சராக ஜெய்சங்கர் நேற்று பதவி ஏற்றார் . இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர், தமக்கு கடந்த 5 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணிப்புரிய வாய்ப்பு  வழங்கி மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை அளித்தார். இதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.