Skip to main content

மனோகர் பாரிக்கர் உடல்நிலை குறித்து கோவா முதலமைச்சர் அலுவலகம்...!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

 

manohar

 

இந்நிலையில் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாகவும், அதனுடன் அவர் போராடி வருவதாகவும் கோவாவின் நகர திட்டத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் இந்த மாதம் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார், இந்த நிலையில் தற்போது கோவா முதலமைச்சர் அலுவலகம், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை சீராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரார்த்தனை பலிக்கவில்லை... மறைந்தார் மனோகர்...

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், அமெரிக்காவுக்கு செல்லும் முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

 

manohar parikar

 

அதில், "எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆசீர்வாதங்களால்தான் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறேன். உங்களின் தொடர் பிரார்த்தனையால் என் உடல்நிலை முற்றிலும் குணமடையும் என நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
 

சொன்னதுபோலவே சிகிச்சை முடிந்து நாடு திரும்பியதும், மீண்டும் அரசு பணிகளில் ஈடுபட்டார். ஆனால், நீண்ட நாள் நிலைக்கவில்லை.  63 வயதிலேயே மரணத்தை தழுவிவிட்டார். கோவா முதலமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்த மனோகர், எந்த இடத்திலும் அதிகார தோரணையில் நடந்து கொண்டது இல்லை. 
 

2015-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது புனேவில், அவரது நண்பரின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனோகர் பாரிக்கர். பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று மணமேடைக்கு சென்று வாழ்த்து தெரிவித்தார். அவர் திருமணத்திற்கு வந்திருந்தது மணமேடையில் இருந்த குடும்பத்தினருக்கு, அப்போது தான் தெரியவந்தது. அந்த அளவுக்கு எளிமையானவர் மனோகர் பாரிக்கர்.

 

manohar parikar

 

இந்த நிகழ்வை திருமணத்திற்கு வந்திருந்த கிரண் சிட்னிஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு தான் இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரியவந்தது. ஐ.ஐ.டி. பட்டதாரியான மனோகர் பாரிக்கர், விமானத்தில் எக்கானமிக் கிளாசில் பயணம் செய்வதை தான் விரும்பினார். அதேபோல், வெளியிடங்களுக்கு செல்லும்போது, கூடுமானவரை போலீஸ் பாதுகாப்பையும் தவிர்த்தார். அரசியல் வானில் விடிவெள்ளியாக திகழ்ந்த மனோகர். காற்றோடு கரைந்துவிட்டார்.

 

 

Next Story

புற்றுநோயுடன் போராடும் மனோகர் பாரிக்கர்...

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

hgjnhgvjnhgf

 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாகவும், அதனுடன் அவர் போராடி வருவதாகவும் கோவாவின் நகர திட்டத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தற்போது கூறியுள்ளார். கோவா முதல்வராக அவர் பதவியேற்ற பின் உடல்நிலை மேலும் மோசமாகவே பின்னர் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மெலிந்த உடலுடன், மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு அவர் பட்ஜெட்டில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.