Published on 05/10/2018 | Edited on 05/10/2018

உத்திரப் பிரதேசம் மாநிலம் பாக்பத்தில் இந்திய விமானப்படையின் சிறிய ரக விமானத்தில் இரு விமானிகள் பயணம் மேற்கொண்டனர். வானில் பறந்து கொண்டிருக்கும்போதே விமானத்தின் இஞ்சீனீல் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த அந்த விமானிகள். உடனடியாக பாராசூட்டை அணிந்துகொண்டு விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். சிறிது நேரம் விண்ணில் பறந்த விமானம் இறுதியில் அங்கிருந்த கரும்பு தோட்டத்தில் விழுந்து உடைந்தது. அந்த இரு விமானிகளுக்கும் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.