Skip to main content

கரோனாவுக்கு 20,034 பேர் பாதிப்பு... 82 பேர் பலி! - ஆந்திரா அப்டேட்!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

gh

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில் தற்போது கரோனா மீண்டும் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 20,034 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 11,84,028 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 82 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். மேலும், இதுவரை 8,289 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 13,211 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9,91,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்