Skip to main content

‘THUG LIFE’ என்ற பெயர் வந்தது இந்தக் கொள்ளையனால் தான்!

Published on 08/11/2023 | Edited on 10/11/2023

 

 THUG LIFE  - THUGGEE 

‘Thug life’ இந்த வார்த்தை இணையத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற பிரபலமான வார்த்தை . எதையுமே கண்டுக்காமல் அசால்ட்டா பதில் சொல்றவங்களுக்கு Thug life பயன்படுத்துறோம். இந்த Thug life எங்கிருந்து வந்தது? எப்படி உருவானது?

 

தக்கீஸ் என்கிற கொள்ளைக் கூட்டத்தில் தக் பெக்ராம் என்கிற கொடூரமான கொள்ளையன் இருந்தான். 1765 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் என்கிற கிராமத்தில் பிறந்தவன். சிறுவயது முதலே கூச்ச சுபாவமான இவன் யாருடனும் அதிகமாக பேசவோ பழகவோ விளையாடவோ மாட்டான். அப்படியிருந்தும் இவனுக்கு தக்கீஸ் கொள்ளைக் கூட்ட குழுவைச் சார்ந்த நண்பன் கிடைக்கிறான். அவன் மூலமாக அந்தக் குழுவில் இணைகிறான்.

 

ஆரம்பத்தில் கொள்ளைக் கூட்டத்தில் சிறிய உதவியாளனாக இருந்தவன், தன்னுடைய 25வது வயதில் தக்கீஸ் கொள்ளைக் கூட்டத்தின் முக்கிய புள்ளியாக உருவெடுக்கிறான். அதிகமாக கொள்ளை அடிக்க வேண்டும் என்ற வெறியும், கொள்ளையின் போது தடுப்பவர்களை இரக்கமற்று கொலை செய்வதிலும் ஒரு மிருகம் போல நடந்து கொள்வதால் கூட்டத்தில் பெரிய ஆளாகிறான். பெக்ராமின் வன்முறைத் தன்மையைப் பார்த்த தக்கீஸ் தலைவர்களே பயப்படுகிற அளவுக்கு வளர்ந்து கொண்டே போகிறவனுக்கு, நாம் தனியாக ஒரு கூட்டத்தினை உண்டாக்கினால் என்னவென்று யோசித்து தன்னை இந்த தக்கீஸ் கொள்ளைக் கூட்டத்தில் இணைத்த நண்பனை தளபதியாக வைத்து 200 பேர் கொண்ட புதிய கொள்ளைக் கூட்டத்தினை உருவாக்குகிறான்.

 

தக் பெக்ராம்
தக் பெக்ராம்

 

தக்கீஸ்கள் சிக்கல் நிறைந்த இடத்தில் பிரச்சனையானவர்களிடம் கொள்ளை அடிக்க மாட்டார்கள். ஏனென்றால் பிரச்சனை பெரிதானால் தங்களை அழித்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் பெக்ராம் சிக்கல் நிறைந்த இடங்களில் தான் கொள்ளை அடித்து வந்தான். குறிப்பாக இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ்காரர்களிடம் தக்கீஸ்கள் கொள்ளை அடிப்பதில்லை. ஆனால் பெக்ராம் அங்கும் கொள்ளை அடித்து வந்தான். 

 

பிரிட்டீஷ்கார ராணுவத்தில் இருக்கிற ஒரு சிப்பாயின் பெண்ணின் உதவியோடு அங்கு சென்று கொள்ளை அடித்துவிட்டுக் கொலையும் செய்து விடுகிறான். தொடர்ச்சியாக கொலை, கொள்ளை ஆவதால் நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் அரசு 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கி கிராமம் கிராமமாகச் சென்று விசாரிக்கிறார்கள். 

 

கொலை, கொள்ளையில் ஈடுபடுவது தக்கீஸ்கள் தான் என்பது எல்லோருக்கும் தெரிய வருகிறது. ஆனால் அதில் குறிப்பிட்ட அந்த குழுக்கள் யார்? அதில் தலைவன் யார் என்று தீவிரமாக விசாரிக்கிறது பிரிட்டிஷ் தேடுதல் குழு. தேடுதலின் முடிவில் அந்த கிராம மக்கள் கண்களில் பயத்தோடு இதையெல்லாம் செய்வது தக் பெக்ராம் தான் என்று சொல்லிவிடுகிறார்கள். இந்த தகவலையும் பிரிட்டிஷ் தலைமைக்கு 5 பேர் தேடுதல் குழு சொல்லி விடுகிறது. துரதிஷ்டவசமாக பெக்ரமிடன் சிக்கிக் கொள்கிற அந்த 5 பேரையுமே தக் பெக்ராம் கொடூரமாகக் கொன்று விடுகிறான்.

 

தக் பெக்ராமின் அட்டூழியத்தை அடக்க பிரிட்டிஷ் அரசு இங்கிலாந்திலிருந்து வில்லியம் ஹென்றி ஸ்லீவ்மென் என்ற அதிகாரியை இந்தியா வர வைக்கிறார்கள். அவர் ஜபல்பூர் கிராமத்தினைச் சுற்றி விசாரிக்கும் போது தக்கீஸ்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்கிறார். தக்கீஸ்கள் பழக்கவழக்கம், நம்பிக்கைகள், உணவு, கொள்ளை அடிக்கும் முறைகள் என அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்கிறார்.

 

தக் பெக்ராமைப் பற்றி விசாரிக்கிறார் என்பதைத் தெரிந்தே அவனது குழு பல முறை கொலை மிரட்டலும், கொலை முயற்சியையும் செய்து பார்க்கிறார்கள். ஆனால் எதற்குமே அசராத வில்லியம் ஹென்றி, தொடர்ச்சியாக தக் பெக்ராமை பிடிக்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். தக்கீஸ்களை அழிக்க பிரிட்டிஷ் அரசு உறுதிபூண்டதை அறிந்த தக்கீஸ்கள் பலர் சரண்டர் ஆகிறார்கள். அதில் ஒருவன், தக் பெக்ராமின் வலது கரமாக செயல்படுகிற சையத் அமீர் அலியைப் பிடித்தால் தக் பெக்ராமை பிடித்து விட முடியும் என்ற தகவலை சொல்கிறான்.

 

 THUG LIFE  - THUGGEE 
வில்லியம் ஹென்றி ஸ்லீவ்மென்

அமீர் அலியைத் தேடிப்போன போது அவன் தப்பிக்கவே அவனது குடும்பத்தை கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள். அதை அறிந்து அவனும் சரணடைகிறான். அவனின் மூலம் தக் பெக்ராமையும் பிடிக்கிறார்கள். ஒரு சில ஆண்டுகள் சிறையிலிருந்தவனை மீட்க அவனது எஞ்சிய ஆட்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இறுதியாக ஜபல்பூரின் நடுவில் உள்ள மரத்தில் தக் பெக்ராமும் அவனது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட்டார்கள்.

 

தக் பெக்ராமின் அட்டூழியத்தை அழித்த  வில்லியம் ஹென்றி ஸ்லீவ்மென் நினைவாக மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஊருக்கு ’ஸ்லீமனாபாத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றும் அந்த ஊர் இருக்கிறது. தக் லைப் என்பது பெருமைமிக்க வார்த்தை இல்லை. அது ஒரு கொள்ளைக் கூட்டத்தினரைக் குறிக்கிற வார்த்தை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

 


 

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.