Skip to main content

பா.ஜ.க.வை பதறவைக்கும் மாநிலங்கள்! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

மோடியின் ஐந்தாண்டு ஆட்சி முடிவதற்கு முன்பே, மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. மாநில அரசின் மீதான கோபங்களுடன், மத்திய அரசின் மீதான ஏமாற்றமும் அதற்குக் காரணமென்பதைச் சொல்லத்தான் வேண்டும். சிவ்ராஜ் சிங்கின் முதல்வர் நாற்காலியில் தற்போது கமல்நாத் அமர்ந்திருக் கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற, எதிர்பாராதது ஏதாவது நடந்தாக வேண்டும்.
 

bjp


ஆனால் கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலில் நிலைமை இப்படியிருக்கவில்லை. ஹெவி வெயிட் சாம்பியன், முதல்முறை யாய் ரிங்குக்குள் வரும் ஒருவனை ஒரே குத்தில் சாய்ப்பதுபோல், மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 26 இடங்களில் வெற்றிவாகை சூடியது பா.ஜ. 3 இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி. அன்றைக்கு மெலிந்து… தளர்வாய் காட்சியளித்த காங்கிரஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சரிக்குச் சரி மல்லுக்கட்டிய துடன் 114 இடங்களைப் பிடித்து சுயேட்சைகளை யும் இணைத்துக்கொண்டு ஆட்சியமைத்திருக்கிறது. இதில் நகைமுரண் என்னவெனில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவிகிதம் 40.9. ஆனால் 41 சதவிகிதம் வாக்கு வாங்கிய பா.ஜ.க. 109 இடங்களையே வென்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு, தங்களது ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை காங்கிரஸ் கிடப்பில் போட்டதாகக்கூறி, ஆட்சியர் அலுவலகங்களை பா.ஜ.க.வினர் முற்றுகை செய்ய, பதிலுக்கு காங்கிரஸ் மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் இழுத்தடிப்பதாக காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.
 

madhyapradesh political

கடந்த 14 வருடங்களில் தோராயமாக 18,000 வேலைகள் மட்டுமே மத்தியபிரதேச அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வேலை யில்லாத இளைஞர்கள் 24 லட்சத்துக்கும் அதிகமான பேர் மாநிலத்தில் இருக்கிறார்கள். மாண்டசூரில் போராட்டம் நடத்திய விவ சாயிகளை, பா.ஜ.க. அரசின் உத்தரவுப்படி கொடு மையாக போலீஸ் ஒடுக்க 6 பேர் இறந்து போனார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் 21 சதவிகிதமாக அதிகரித் திருக்கிறது. வழக்கமாக பி.ஜே.பி.க்கு ஓட்டுபோடு பவர்களிடையேகூட அதிருப்தி அதிகரித்திருக் கிறது. சாவர்னா இனத்தினர் தனிக்கட்சி ஆரம்பித்திருக் கின்றனர். இவர்கள் வழக்க மாக பா.ஜ.க.வுக்கு முத்திரை குத்துபவர்கள்.
 

rajastan political

காற்று திசைமாறி வீசுவதை பா.ஜ.க.வும் உணர்ந்திருக்கிறது. இருந் தாலும் பி.எஸ்.பி.- எஸ்.பி. கட்சிக் கூட்டணி உத்தரப் பிரதேசத்தைத் தாண்டி மத்தியப் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டிருக் கிறது. கடந்த தேர்தலில் 6.5 சதவிகிதம் வாக்குகளை இந்தக் கட்சி பிரித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலைப்போலவே நாடாளுமன்றத் தேர்தலிலும், இரு கட்சிகளுக்குமான வாக்குவித்தியாசம் நூலிழை யில் அமையுமெனில் அது காங்கிரஸுக்குதான் பாதிப்பாக அமையும். தவிரவும், பாகிஸ்தான்மீதான விமானத் தாக்குதல் பிரதாபங்களை, வாக்காக மாற்றவும் பா.ஜ. முனையும்.  மத்தியப்பிரதேசத்தில் வெற்றி என்பது மதில்மேல் பூனையாக அமர்ந்து இருதரப்பையும் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது.
 

bsp party

ராஜஸ்தான் நிலவரம் மத்தியப் பிரதேசத்தி லிருந்து வெகுவாக வித்தியாசமில்லை. கடைசியாக நடந்த சட்டமன்றத்துக்கான தேர்தலில் பா.ஜ.க. பறிகொடுத்த 3 மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தி யாசமான அரை சதவிகிதத்துக்கு 27 இடங்களை பா.ஜ.க. இழக்கநேர்ந்தது துயரம்தான். வசுந்தரா வின் நாற்காலியில் இப்போது அசோக் கெலாட். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 20 இடங்களை வென்ற காங்கிரஸ் 2014-ல் வெறும்கையோடு நிற்க, மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டது பா.ஜ.க.. 1996-க்குப் பின்பு வந்த தேர்தல்களில் ஏதோ ஒரு கட்சிக்குத்தான் பொதுமக்கள் மெஜா ரிட்டி அளித்துவந்திருக்கின்றனர். அதேபோக்கு தொடருமெனில், ராஜஸ்தானில் இம்முறை காங்கிரஸுக்கு பெருவாரியான தொகுதிகளில் வெற்றிகிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ.(எம்.எல்.), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள் போன்ற கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.வை எதிர்த்தன. அதற்குரிய பலனும் இருந்தது. ஆனால் நாடாளு மன்றத் தேர்தலிலோ 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களையே நிறுத்தப்போவதாக பைலட் அறிவித்திருப்பதால், இம்முறை கூட்டணி இல்லையென்றே தோன்றுகிறது.
 

பகுஜன் சமாஜ், ஆர்.எல்.பி., பாரதிய ட்ரைபல் பார்ட்டி மூன்றும் சேர்ந்து கூட்டணி அமைத்து செல்வாக்குள்ள தொகுதிகளில் போட்டியிடலா மெனத் தெரிகிறது. அப்படி கூட்டணி அமைந்தால் அதனால் காங்கிரஸுக்குத்தான் இழப்பு. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த கன்ஷியாம் திவாரி, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சந்திரா மீனா போன்ற பெருந்தலைகள் பா.ஜ.க.வை விட்டு விலகியது அக்கட்சிக்கு இழப்பாக அமையும். சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஏற்பட்டிருக் கும் நம்பிக்கை இழப்பைச் சரிக்கட்ட, சாத்தியமான கூட்டணி எதையும் அமைக்கவிருக்கிறதா என்பதும் இதுவரை தெளிவாகவில்லை. கட்சிக்குள்ளேயே நடைபெற்ற உட்கட்சி மோதல்கள் ராஜஸ்தானில் பா.ஜ.க.வை பாதித்திருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக் கிடைக்காமல் கட்சியிலிருந்து வெளியேறி கணிசமான வாக்குகளைப் பிரித்தவர்களை இனம்கண்டு, அவர்களை சமாதானப்படுத்தி கட்சியில் சேர்க்கும் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது பா.ஜ.க. என்னதான் சூழல் பதட்டத்தைத் தந்தாலும், வெற்றியை எளிதில் விட்டுத் தந்துவிடாது பா.ஜ.க. நல்லநாளைத் தருவதற்கு பா.ஜ.க.வைவிட தாங்கள்தான் தகுதியானவர்கள் என்பதை மக்கள் மனதில் விதைப்பதில் வகுக்கும் வியூகத்திலிருக்கிறது காங்கிரஸ் வெற்றி!


-க.சுப்பிரமணியன்.

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.