Skip to main content

தி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை... - ஷானவாஸ் அதிரடி

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

சமீபத்தில் தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து அதில் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் இடம்பெறவில்லை என்பது பலராலும் விமர்சிக்கப்படுகிறது. மேலும், இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத் “எங்கள் கோரிக்கையை ஏற்று தி.மு.க ஒரு முஸ்லீம் வேட்பாளரையும் அறிவிக்கவில்லை”என செய்தி வெளியிட்டார். இந்த சர்சைகள் குறித்து தி.மு.க கூட்டணி கட்சியான வி.சி.க-வின் துணைப் பொது செயளாலர் ஷானவாஸ் நமக்கு கொடுத்த பேட்டியின் தொகுப்பு. 

 

Shanavas speech about DMK canditas

 

அர்ஜூன் சம்பத் பேச்சையெல்லாம் கேட்டு தி.மு.க முடிவெடுக்கிறது என்பது அபத்தமானது. அர்ஜூன் இப்படி சொல்கிறார், ஆனால் எச்.ராஜா முஸ்லீம் லீக் கட்சியை வைத்துக்கொண்டு தி.மு.க மதசார்பற்ற கூட்டணி என்று சொல்கிறது என கூறுகிறார்.  இந்துத்துவா வலதுசாரி கட்சிகளில் அரசியல் அதிகாரத்தை முன்னெடுக்ககூடிய எச்.ராஜா, முஸ்லீம் லீக் இருக்கிற மதசார்பு கூட்டணியென தி.மு.க-வை கார்னர் செய்கிறார். அர்ஜூன் சம்பத் தி.மு.க முஸ்லீம்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, அது எங்கள் பேச்சைக் கேட்டுத்தான் என்று சொல்கிறார். எனவே, அவர்களுக்குளேயே முரண்பாடுகள் இருக்கின்றன. அதை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை. 
 

தி.மு.க, முஸ்லீம் லீக் என்ற கட்சியைத் தன்னோடு இணைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒரு இடத்தையும் கொடுத்திருக்கிறது. எனவே, தி.மு.க வும் அ.தி.மு.க கூட்டணியும் ஒன்றல்ல, இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. அப்படி பார்த்தால், தி.மு.க கூட்டணியில் இரண்டு முஸ்லீம் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் முற்றிலுமாக முஸ்லீம் பங்களிப்பே கிடையாது.  தி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை என்பது நியாயமான கேள்வி. தி.மு.க-விடம் கேட்கவேண்டிய கேள்வியும் கூட, தி.மு.க-வை நோக்கித்தான் இத்தகைய கேள்விகள் வரும். ஏனென்றால், தி.மு.க தான் சமூக நீதியை முன்னிருத்துகிற கட்சி, அது அனைத்துச் சமுகத்திற்குமான அதிகார பரவலை யாரும் கேட்காமலே கொடுத்திருக்க வேண்டும். இந்த முறை நேர்ந்த தவற்றை எதிர்காலத்தில் சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  அதையும் தாண்டி, கடந்த 25 ஆண்டுகளாக, குறிப்பாக பாபர் மசுதி இடிக்கப்பட்டப் பிறகு வெகுஜன அரசியலில், அரசியல் கட்சிகளில் முஸ்லீம் இளைஞர்களின் பங்கேற்பு வெகுவாக குறைந்துள்ளது. தி.மு.க-வில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லீம் ஆளுமைகளாக சாதிக் பாட்ஷா, ஆயிரம் விளக்கு உஷேன், ரகுமான், மைதீன்கான், உமையத்துல்லா ஆகியோர் இருந்தனர். நாகூர் ஹனிபா என்கிற மிகப்பெரிய ஆளுமை தி.மு.க-வின் பிரச்சார முகமாக, கலைஞரின் நண்பராக இருந்தார் என்று ஒரு பட்டியலை சொல்ல முடியும். ஆனால், இப்போது ஆளுமைகளாக இருக்கிறார்கள் என்று யாரையாவது சொல்ல முடியுமா? நிறையபேர் இருக்கிறார்கள், ஆனால், தி.மு.க தலைமையால் அங்கிகரிக்கப்படக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஆளுமைகளாக இருக்கிறார்களா? கடந்த 25 ஆண்டுகளில் முஸ்லீம் இளைஞர்கள் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்களா? அதன் முடிவுகளில் பங்கேற்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்களா? என்றால், இல்லையே. தி.மு.க-வில் மட்டுமல்ல எந்த கட்சியிலும் பங்கேற்கவில்லையே. 
 

 

thirumavalavan with shanavas

 

நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறேன். முப்பது வயதில் கட்சியின் துணைப் பொதுசெயளாலர் ஆனேன். அப்போது தலைவர் என்னை கலைஞரிடம் கூட்டிச் சென்றார். அப்போது என்னை கலைஞரிடம் அறிமுகம் செய்யும்போது அருகில் துரைமுருகன் அண்ணன் இருந்தார். அவர் “நானெல்லாம் 30 வருஷம் வேலைப் பார்த்தப்பிறகுதான் பொதுசெயளாலர் ஆனேன், நீ 30 வயசுலயே பொது செயளாலர் ஆயிட்ட”என்று சொன்னார். நான் ஒரு முஸ்லீம் இளைஞன், முஸ்லீம் அல்லாத ஒரு கட்சியில் இணைந்து, பணியாற்றி, என் ஆற்றலை நிருபித்து, அந்தக் கட்சியின் துணைப் பொது செயளாலராக பொறுபேற்க முடிகிறது. இதே சமூகத்திலில்ருந்துதான் நானும் வந்திருக்கிறேன். இந்த மைய நீரோட்ட அரசியல் என்னை விலக்கி வைக்கவில்லை, 30 வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புக் கொடுப்பதா என யாரும் கேள்வி கேட்கவில்லை.  என்னைவிட வயதில் மூத்தவர்கள் இந்தக் கட்சியில் இருக்கிறார்கள், இந்த கட்சிக்காக அர்பணித்து உழைத்தவர்கள் இன்னும் மாவட்ட செயளாலராக ஆகமுடியாமல் இருக்கிறார்கள். ஆனால், நான் 30 வயதிலேயே துணைப் பொது செயளாலராகிறேன், பொருளாலராக யூசூஃப் இருக்கிறார். அப்போ, பங்களிப்பு மட்டுமல்ல, ஆற்றல் கொண்டவர்களாகவும், அந்த கட்சிக்கு பொதுவெளியில் நன்மதிப்பை பெற்றுத்தரக் கூடியவர்களாக இருக்கவேண்டும். இத்தகைய ஆற்றலும், திறமையும் உள்ளவர்களுக்கு தேர்தல் களத்தில் அங்கிகாரம் கிடைத்துள்ளதே. எனக்கும் போட்டியிடுகிற வாய்ப்புக் கிடைத்தது, யூசூஃப்-க்கும் தி.மு.க அணியிலயே உளூந்தூர்பேட்டையில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்ததே. வெற்றிபெறவில்லை என்றாலும் எங்களுக்கான இடம் எங்களது பங்கேற்பால் கிடைத்தது. முஸ்லீம்களில் தி.மு.க அபிமானிகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க கொள்கைகளை பொதுவெளியில் முழங்கக்கூடிய அளவுக்கு, தி.மு.க தலைமையை தன் பக்கம் ஈர்க்கிற அளவுக்கு எத்தனை முஸ்லீம் இளைஞர்களின் பங்கேற்பு இருக்கிறது? பங்கேற்பு இருந்தால்தானே அங்குபோய் க்ளைம் பண்ணமுடியும். முதலில் வேட்புமனு கொடுக்கணும்ல, வேட்புமனு கொடுக்கிற அளவுக்கு கட்சியில் பங்களிப்பு இருக்கணும்ல. 
 

அடிமட்ட தொண்டனாக இருந்து தனது பங்களிப்பைக் கொடுக்ககூடிய பல முஸ்லீம்கள் இருக்கலாம், நான் அவர்களைச் சொல்லவில்லை. தனது பங்களிப்பால் கட்சியினுடைய கவனத்தை  மட்டுமல்ல, கட்சியின் முகமாக வெகுமக்கள் கவனத்தை ஈர்க்ககூடியவராக இருக்கவேண்டும். நான் வி.சி.க-வில் இருக்கிறேன், இப்போது நான் இந்த கட்சித் தலைவரின் கவனத்தை மட்டும் ஈர்க்கவில்லை, வெகுமக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளேன். தலைவர் வெளியில் செல்லும்போது உங்க கட்சியிலிருந்து அந்த தம்பி நல்லா பேசினாங்க, நல்லா செயல்படுறாங்க என எல்லோரும் சொல்லுவார்கள். இதுபோல், இந்த 25 ஆண்டுகாலத்தில் பொதுகட்சிகளில் எத்தனை முஸ்லீம் இளையர்கள் தங்களது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்? இதோடு பொறுத்தித்தான் இந்த பிரச்சனையைப் பார்க்கணும். வெறுமனே ஒரு அரசியல் கட்சியை குற்றம் சொல்லிவிட கூடாது. நான் தி.மு.க-வை காப்பாற்றுவதற்காக இதைப் பேசவில்லை. தேடிப் பிடித்தாவது ஒரு முஸ்லீம் சமுகத்தவருக்கு தி.மு.க இடம் கொடுத்திருக்கவேண்டும் என்பது உண்மை. அது ஒரு பக்கமிருந்தாலும், நான் கையை என்பக்கம் திருப்பி பார்க்கிறேன், என் சமூகத்தின் பக்கம் திருப்பி பார்க்கிறேன். அந்தவகையில், என் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் பின்தங்கியுள்ளது.

 

 

 

 

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.