Skip to main content

குமரவேல் சார் நேர்காணல் நடந்துகொண்டிருக்கும்போதே... முரளி அப்பாஸ்

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

மக்கள் நீதி மய்யத்திலிருந்து நேற்று மூவர் விலகியது, மற்றும் தேர்தல் பணி ஆகியவை குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நக்கீரனுக்கு அளித்த பேட்டி.
 

makkal neethi maiam


தேர்தல் அறிக்கை எந்த அளவில் தயாராகிக்கொண்டிருக்கிறது?

நாளை வேட்பாளரை அறிவிக்கின்றோம். அதைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கை வரும். 
 

வேட்பாளர் அறிவிப்பில் புதிய விஷயங்களாக எதை எதிர்பார்க்கலாம்?
 

எங்களிடம் பிரபலமானவர்கள் மிகவும் குறைவு. அதனால் மற்ற தகுதி சார்ந்து சொல்லிக்கொள்ளும்படி அருமையான வேட்பாளர்களாக இருப்பார்கள். மக்கள் விரும்பக்கூடிய, மக்களுக்கு சரியான வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவோம். 
 

நேற்று மூவர் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்களே என்ன காரணம்?
 

குமரவேல் சார் நேர்காணல் நடந்துகொண்டிருக்கும்போதே சமூக வலைதளத்தில் தேர்தலில் நிற்கிறேன், என பதிவிட்டுவிட்டார். கட்சி அறிவிக்கும் முன்னரே நீங்கள் வெளியிடுவது தவறாயிற்றே. எனக் கேட்டனர். அந்த விசாரணையில் ஏதும் வருத்தமிருக்கும் என நினைக்கிறேன். அவரை இன்று கேட்கவில்லையென்றால், நாளை ஏதோ ஒரு சின்ன பதவியில் இருப்பவர்களும் அப்படி நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் கட்சியின் கட்டுக்கோப்பு கலைந்துவிடும்.


அப்படி கேட்டால் அவரை கேட்டிங்களா என்ற கேள்வியும் வரும். அதிலும் அவர் தெளிவான ஒரு பிசினஸ் மேன், எதையும் முறைப்படுத்திக்கொள்ள தெரிந்தவர். ஆனால் என்னவென்று தெரியவில்லை, உடனே விலகிக்கொள்கிறேன் என தெரிவித்தார். அப்போதும் அது கிடப்பில்தான் இருந்தது. அது அடுத்தநாள் தொலைக்காட்சியில் பெரிய விவாதமானது. அதன்பிறகுதான் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவர் குமரவேலின் நெருங்கிய நண்பர், அவரோடுதான் கட்சிக்குள் வந்தார். அவரில்லாததால் இவரும் போய்விட்டார் என நினைக்கின்றேன். 
 

கட்சியில் புதிதாய் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்துவிடுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? 
 

பொறுத்தமானவர் கிடைக்கும்போது அவருக்கு பதவி கொடுப்பது வழக்கமான நடைமுறைதான். திறமையை பயன்படுத்துங்கள் என பொறுப்பை கொடுக்கிறோம். சீனியர், ஜூனியர் என்பதை நாங்கள் முக்கியமானதாக கருதவில்லை. கோவை சரளாவை நாம் காமெடி நடிகையாக மட்டும் பார்க்கக்கூடாது. பிரகாஷ் ராஜ் வில்லன் நடிகர்தான். அதற்காக அவரின் அறிக்கைகளையெல்லாம் வில்லன் அறிக்கைகளாக நாம் பார்க்க முடியுமா. அந்தக் குழுவில் கார்ட்டூனிஸ்ட் மதன், ராவ், வக்கீல் விஜயன் விஷயம் தெரிந்த பிரபலங்களும் இருந்தார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் கோவை சரளாவிற்கு மட்டும் விஷயம் தெரியாது என நினைக்கக்கூடாது.


 

makkal neethi maiam


 

வேட்பாளர் தேர்வில் எதை முக்கியமாக கருத்தில் கொண்டீர்கள்?
 

அவர்களுடைய தகுதிதான். டெல்லியில் போய் நமது மாநிலத்திற்காக, உரிமைக்காக குரல் கொடுப்பார்களா என்பது, அவரவர் தொகுதி குறித்த அறிவு, மாநில தேவைகள், இருக்கிற பிரச்சனைகள் இது குறித்த ஞானம், அர்பணிப்பு, மக்கள் சேவையில் ஆர்வம் இவற்றிற்குதான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். மற்றபடி ஜாதி, மதம் இவற்றையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. ஒரு பிரபலமான வேட்பாளர் என்பது கடினமாக இருந்தாலும், ஒரு சிறந்த வேட்பாளராக அவர்கள் இருப்பார்கள். 
 

நேற்று குமரவேல் கூறியிருந்தார், கோவை சரளா தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள் என்பதை மட்டுமே கேட்டார் என்று. மக்கள் நீதி மய்யமும் பணத்திற்குதான் முக்கியத்துவம் தருகிறதா?
 

இதற்கு கோவை சரளாவும் குழுவில் இருந்தவர்களும் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும், ஏனெனில் இது அவர்களுக்குள் நடந்த கருத்துரையாடல். வெளியில் அப்படி கேட்கப்படவில்லை என்பதுதான் பெரிய விஷயமாக பேசப்பட்டது. நேர்காணலுக்கு வந்தவர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக கூறினார்கள், ஜாதியைப் பற்றி கேட்கவில்லை, பணத்தைப்பற்றி கேட்கவில்லை என்று.

 

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.