Skip to main content

20 தொகுதி இடைத்தேர்தலில் கடந்தமுறை கட்சிகள் வாங்கிய வாக்குகள்! யார் ஜெயிப்பார் இந்த இடைத்தேர்தலில்? 

Published on 30/10/2018 | Edited on 30/10/2018

 

 

தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கும், திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி காலியாகவுள்ள திருவாரூர், அதிமுக உறுப்பினர் ஏ.கே.போஸ் இறந்ததால் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
 

இந்தத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை திமுகவும் அதிமுகவும் முடுக்கி விட்டுள்ள நிலையில் அந்தத் தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்குகளை இங்கே கொடுத்துள்ளோம். அதிமுக உடைந்து, திமுகவுடன் புதிய கட்சிகள் அணி அமைத்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க இது உதவும் என்று நினைக்கிறோம்...


திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளும், அவர்களுக்கு அடுத்தபடியாக வந்த கட்சி வாங்கிய வாக்குகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன...
 

1.ஆண்டிபட்டி

டி.தங்­க­த­மிழ்­செல்வன் (அதிமுக) 1,03,129
எல்.மூக்கையா, (திமுக) 72,933
எம்.என்.கிருஷ்ணமூர்த்தி (தேமுதிக) 10,776
 

2.பெரியகுளம் (தனி)
டாக்டர் கே. கதிர்­காமு (அதிமுக) 90,599
வீ.அன்பழகன், (திமுக) 76,249
ஏ.லாசர், எம்.எல்.ஏ., (மா.கம்யூ.) 13,525


3.பெரம்பூர்
வெற்றிவேல் (அதிமுக) 79,974
என்.ஆர்., தனபாலன் (திமுக) 79,455
அ.சவுந்தர்ராஜன் (மா. கம்யூ.,) 10,281


4.ஆம்பூர்
பாலசுப்பிரமணி (அதிமுக) 79,182
நசீர் அகமது (ம.ம.க) 51,176
வாசு (தேமுதிக) 7,043


5.தஞ்சாவூர்

ரங்கசாமி  (அதிமுக) 101333
அஞ்சுகம் பூபதி (திமுக) 74,487
எம்.எஸ். ராமலிங்கம் (பாஜ) 3806


6.அரூர் தனி

முருகன் (அதிமுக) 64,568
ராஜேந்­திரன் (திமுக) 53,147
கோவேந்தன் (விசி) 33,632
முரளி (பாமக) 27,747


7.அரவாக்குறிச்சி

வி.செந்தில் பாலாஜி (அதிமுக) 88068
கே.சி.பழனிச்சாமி (திமுக) 64407
எஸ்.பிரபு (பாஜ) 3162


8.நிலக்கோட்டை

தங்கதுரை (அதிமுக)  85,507
அன்பழகன் (திமுக)   70731
ராமசாமி (தேமுதிக) 7609
வாக்கு வித்தியாசம் 14776


9.மானாமதுரை (தனி)

எஸ்.மாரி­யப்­பன்­கென்­னடி (அதிமுக) 89,893
எஸ்.சித்ராசெல்வி (திமுக) 75,004
தீபா அன்பழகன் (விசி) 7,493


10.குடியாத்தம் தனி

ஜெயந்தி பத்மநாபன் (அதிமுக) 94,689
ராஜ­மார்த்­தாண்டன் (திமுக) 83,219
பூ.தீபா (பாமக) 7,505


11.விளாத்திகுளம்

உமாமகேஸ்வரி (அதிமுக) 71,496
ச.பீமராஜ் (திமுக) 52,778
கதிர்வேல் (தமாகா) 15,030


12.திருப்போரூர்

கோதண்டபாணி (அதிமுக) 70,215
விஸ்­வ­நாதன் (திமுக) 69,265
பி.வி.கே.வாசு (பாமக) 28,125
மல்லை சத்யா (மதிமுக) 25,539


13.சாத்தூர்

எஸ்.ஜி.சுப்­பி­ர­ம­ணியன் (அதிமுக) 71,513
எஸ்.வி.சீனிவாசன் (திமுக) 67,086
ரகுமான் (மதிமுக) 25,442


14.திருப்பரங்குன்றம்

(2016 சட்டமன்றப் பொதுத்தேர்தலில்)
சீனிவேல் (அதிமுக) 93,453
மு. மணிமாறன் (திமுக) 70,461
க.கந்தசாமி (இ.கம்யூ.,) 15,295
(சீனிவேல் இறந்ததால் இடைத்தேர்தலில்)
ஏ.கே. போஸ் (அதிமுக) 1,13,032
சரவணன் (திமுக) 70362
சீனிவாசன் (பாஜ) 6930
தனபாண்டியன் (தேமுதிக) 4105


15.பாப்பிரெட்டிபட்டி

பி.பழனியப்பன் (அதிமுக) 74,234
சத்தியமூர்த்தி (பாமக) 61,521
பிரபு ராஜ­சேகர் (தி.மு.க.) 56,109
பாஸ்கர் (தே.மு.தி.க.,) 9,441


16.சோளிங்கர்

பார்த்திபன் (அதிமுக) 77,651
முனிரத்னம் (காங்.) 67,919
க.சர­வணன் (பாமக) 50,827
மனோகர் (தே.மு.தி.க.,) 6,167


17.திருவாரூர்

மு.கரு­ணா­நிதி (திமுக) 1,21,473
பன்னீர்செல்வம் (அதிமுக) 53,107
பி.எஸ்.மாசிலாமணி (இ.கம்யூ.) 13,158

18.பரமக்குடி தனி

டாக்டர் எஸ்.முத்­தையா (அதிமுக) 79,254
உ.திசைவீரன் (திமுக) 67,865
பொன்.பாலகணபதி (பாஜ) 9,537


19.ஒட்டப்பிடாரம் (தனி)

சுந்தரராஜ் (அதிமுக) 65,071
கிருஷ்ணசாமி (புத) 64,578
ஆறு­முக நயினார் (தேமுதிக) 14,127

20.பூந்தமல்லி

ஏழுமலை (அதிமுக) 1,03,952
பரந்­தாமன் (திமுக) 92,189
பார்த்தசாரதி (பாமக) 15,827
கந்தன் (மதிமுக) 15,051

 

 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.