Skip to main content

"அ.தி.மு.க ஆட்சி இனிமேல் தமிழகத்திற்கு வரக்கூடாது” - ரஜினி

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

ரஜினியின் 69-வது பிறந்தநாளை இன்று அவரின் இரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடிக்கொண்டு இருக்க, மறுபுறம் அவரின் பேட்ட படத்தின் டீசர் வெளியாகி அவரின் இரசிகர்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் அவரின் அரசியல் நுழைவு குறித்தும் அவ்வபோது பேச்சுகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி, தனது 47-வது பிறந்த நாள் (12.12.1995) அன்று, மக்கள் கடிதங்கள் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அளிக்கவிருந்தப் பதில்கள். இந்தப் பதில்கள் ரஜினி கடைசியாக பார்த்து சென்சார் செய்வதற்கு முன்பாக கிடைத்த தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டியில், இமயமலையில் ஒரு சாமியாரை சந்தித்து அவர் பேச்சைக் கேட்டதால் ரஜினிக்கு வந்த தொல்லைகள் மற்றும் அதனால் அவருக்கு கிடைத்தது என்ன, தனக்கு எதிரி எந்த ஆட்சி என்பதைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். முக்கியாமக தான் எந்த சூழலில், எப்படி அரசியலுக்கு வருவேன் என்பதை தெரிவித்துள்ளார். அவரின் பதில்களை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

 

 

rr

 

 

 

  • இமயமலைக்கு சென்றிருந்தப்போது ஒரு சாமியாரை பார்த்தேன் அவர் சொன்னார், “நான் உன்னைப் போல ஒரு சாமியாரை இங்குதான் சந்தித்தேன். அவர் ஆறு மாதகாலம் பொய்யே பேசாமலிருந்துவிட்டு இங்குவா என்றார். நானும் பொய் பேசுவதேயில்லை. எனக்கு பெரிய தொல்லைகள் வந்தது. மனைவி, குழந்தைகளெல்லாம் விலகிவிட்டார்கள். சிறைக்கும் அனுப்பப்பட்டேன். அப்படியிருந்தும் நான் பொய் பேசவில்லை. ஜெயிலிலிருந்தபோது என் வக்கீல்கள் வந்து ‘16 கோடி ரூபாய் உங்களுக்கு வந்துள்ளது’ என்றார்கள். பொய் பேசாமலிருந்ததற்கு 16 கோடி ரூபாய்” என்றார் அந்த சாமியார். அவருக்கு வயது 80.

 

  • எனக்கு எதிரி யாருமில்லை. அ.தி.மு.க.விலும் நண்பர்கள் இருக்கின்றார்கள். ஜெயலலிதாவின் ஆட்சி முறைதான் எனக்கு எதிரி.

 

  • நான் அரசியலுக்கு வரலை. இறையருளால், உங்க ஒத்துழைப்போடு அடுத்த தடவை ஆட்சிக்கு வந்தா சிங்கப்பூர் போல் கண்டிப்பா இந்த நாட்டை வைச்சுக்குவேன். அதுக்கு உங்க ஒத்துழைப்பும் அவசியம் தேவை. 

 

  • இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இனிமேல் ஜெயலலித்தா ஆட்சி வந்துவிடக்கூடாது. என்று அந்தப் பதில்களின் சாரம்சம் இருந்தது.

 

இதைத்தவிர்த்து தான் எப்போது, எப்படிப்பட்ட சூழலில் அரசியலுக்கு வருவேன் என்பதைப் பற்றி ரஜினியே சொல்லியிருக்கிறார். 

 

  • “எங்கேயோ பிறந்து வளர்ந்த என்னை தமிழக மக்கள் தங்கள் வீட்டுப்பிளையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு கைமாறு நான் ஏதாவது செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. இந்த அ.தி.மு.க ஆட்சி இனிமேல் தமிழகத்திற்கு வரக்கூடாது. மீறிவந்தாலும் அல்லது தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் அப்போது என் மனைவி, என் குடும்பம், என் சுகங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் அரசியலில் குதிப்பேன். அதுவரை அரசியலை கற்றுக்கொள்வேன். என்னுடைய அரசியல் நுழைவு தமிழகத்திற்கு விடியலை தருவதுபோல் இருக்க வேண்டும்” என்றார் ரஜினி.

 

 

 

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.