Skip to main content

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய முன்னணி வர்ணனையாளர்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

ipl

 

நடப்பு ஐ.பி.எல் தொடரின் வர்ணனைக் குழுவில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வர்ணனையாளராகச் செயல்பட்டு வந்தார். தற்போது அதில் இருந்து விலகுவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என் குழந்தைகளுக்கு பள்ளி அரையாண்டு விடுமுறை காலம் என்பதால், அவர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். அதனால், நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறேன். இந்த வருடம் சற்று வித்தியாசமான வருடமாக அமைந்தது. முழு நேரத்தையும் என் குழந்தைகளுடன் கழிக்க விரும்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.