Published on 05/10/2018 | Edited on 05/10/2018

இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் இரண்டு டெஸ்ட் தொடரை விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்விஷா தனது முதல் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்தார். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சதம் அடித்தார். இவரை தொடர்ந்து ஆடிய ரவீந்திர ஜடேஜாவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்துள்ளார். தற்போதைய நிலையில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 649ரன்கள் எடுத்து டிக்லேர் செய்துள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆட களம் இறங்கியுள்ளது.