Skip to main content

உங்கள் கம்ப்யூட்டர் உங்களை டென்ஷன் ஆக்குதா? இதைக் குத்துங்கள்...

Published on 09/08/2018 | Edited on 09/08/2018

உலகம் சுருங்கி நம்ம கைக்குள்ள கணினியா வந்த பிறகு அலைச்சல், உடல் உழைப்பு எல்லாம் குறைஞ்சுருக்கு, ஆனால் 'ஸ்ட்ரெஸ்' அதிகமாயிடுச்சு. நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும் இடங்களென்று பார்த்தால், ட்ராபிக் அதிகமா இருக்கும் பயணம், அதுக்கடுத்து நாம் வேலை செய்யுற அலுவலகம். இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்துதான் பெரும்பான்மையான வேலைகள் செய்யுறோம். அதனால், நம் வேலை நமக்குக் கொடுக்கும் ஸ்ட்ரெஸ் என்பது கம்ப்யூட்டர் வழியாகத்தான் வருகிறது. இதனால் கம்ப்யூட்டர் மேல் கோபமாகி அதைத் தூக்கி உடைப்பது போன்ற வீடியோக்கள் எல்லாம் பார்த்திருப்போம். உண்மையில் அப்படி நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை, ஆனால், தூக்கி துடைக்கவேண்டும் என்று தோன்றுகிற அளவுக்கு நமக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுவது உண்மைதானே? அப்படி நிகழாமல் தடுக்க இப்போ நிறைய ஸ்ட்ரெஸ் பஸ்ட்டரும் வந்திருக்கு. இதனோட வேலை என்னனா, நம்ம ஸ்ட்ரெஸ் ஆகிற விஷயத்துல இருந்து, நம்மளுடைய கவனத்தை திசை திருப்பி, அதில் நமக்கு இருக்கிற ஸ்ட்ரெஸ்ஸைக் குறைப்பதுதான்.

 

stress

 

இதுக்கு முன்னாடி வரை நமக்கு ஸ்ட்ரெஸ் இருந்தா என்ன பண்ணுவோம் ? ஒன்னு கத்துவோம், இல்ல சுவரைக் கையால் குத்துவோம். ஒரு வேளை ஆபீஸ்ல இருந்தா 'கீபோர்ட்'ல இருக்கிற என்டர் பட்டனைப் போட்டு அடிப்போம். இது எல்லாத்துக்கும் மாறாக இப்போ 'பிக் என்டர் கீ'  அப்படினு ஒன்னு வந்திருக்கு. இதை நாம் 'யு.எஸ்.பி.' (USB) கேபிள் மூலமா நம்ம கம்பியூட்டர்ல கனக்ட் பண்ணிட்டா,  நாம வேலை செய்யும்போது டென்ஷன் ஆனோம்னா அந்த 'என்டர் கீ'ய ஒரு அடி அடிக்கலாம். அது உடையாது, என்டர் கீ செய்ய வேண்டிய வேலையையும் செய்யும், நம்ம டென்ஷனையும் குறைக்கும்.

 

stress

 

கம்ப்யூட்டரைத் தாண்டி நமது ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க ஸ்ட்ரெஸ் பால்கள் இருக்கின்றன. அந்த மஞ்சள் நிற ஸ்மைலி பந்துகளை  நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஸ்ட்ரெஸ் பால்களாலும் குறையாத ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க 'பன்ச்சிங் பேக்'னு ஒன்னு இருக்கு. இதை நம்ம வீட்டில் டென்ஷனா இருக்கும் போது குத்திக் குத்தி விளையாடலாம். இதை குத்தும் போது நம்மள டென்ஷன் பண்ணவங்களோட முகத்தில் குத்தற மாதிரி ஒரு ஃபீலிங்கும் கிடைக்கும், நமக்கும் டென்ஷன் குறையும், நம்மள சுத்தி வன்முறையும் குறையும். இன்னும் டீடைல்ஸ் வேணுமா...  சும்மா யூ டியூபில் செக் பண்ணுங்க பாஸ்.

 

Next Story

ஊரடங்கால் மன அழுத்தமா? கட்டணமில்லா ஆலோசனை வழங்க மருத்துவர்கள் தயார்! 

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனித்திருத்தலும், சமூக விலகலும் மட்டுமே இப்போதைக்கு வைரஸ் பரவலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளாக சொல்லப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில், மலேரியா பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை, கரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஓரளவு மீட்க உதவுகிறது என்பது மட்டும்தான், இப்போதைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல் செய்தி.

இது ஒருபுறம் இருக்க, திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்கா, கடற்கரைகள் என பொழுதுபோக்கிய மக்களுக்கு தற்போதைய ஊரடங்கு உத்தரவு, அவர்களை சொந்த வீட்டுக்குள்ளேயே கைதி போன்ற மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. 'ஒர்கஹாலிக்' எனப்படும் பணியிடங்களிலேயே மூழ்கியவர்களுக்கு இந்த வீடடங்கல், கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.

 Is curfew stress? Doctors are ready to provide free consultation!

ஊரடங்கு உத்தரவினால் பெரிதும் மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பது உலகளவில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் என சில நாள்களுக்கு முன்பு, கவலை தெரிவித்து இருக்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா கட்டரெஸ். சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியோ நாடுகளில் குடும்ப வன்முறைகள் பெருகி இருக்கின்றன. 

இந்தியாவில், நம்ம ஊரிலும்கூட, 'எப்போது சார்... இந்த கரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும்? வீட்டில் அவரோடு மல்லுக்கட்ட முடியல. குழந்தைகளைக் கூட பார்த்துக்கலாம் போலருக்கு. அவரை வைத்து சமாளிக்க முடியல,' என கணவர்களால் ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றி பேசி வருகிறார்கள் பெண்கள். 

இது இப்படி இருக்க, ஏப். 11ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக இருக்க, டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டவர்கள், ஆல்கஹாலுக்கு பதிலாக வார்னீஷ், சானிடைஸர் லோஷன் ஆகியவற்றை நீரில் கலந்து குடித்து உயிரிழந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் என்கிறது காவல்துறை புள்ளிவிவரம். 

மதுரையில், ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய இளைஞர் ஒருவர் விரக்தியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை கடித்தே கொன்ற சம்பவமும், வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மற்றொருவர் மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. 

சமூகத்தில் பலருடைய மன அழுத்தத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் அவர்கள் அங்கீகாரத்திற்காக ஏங்குவதும்; அல்லது, அவர்களுடைய பிரச்னைகளை கேட்பதற்கு ஆள் இல்லாமல் போவதும்கூட முக்கிய காரணங்களாக சொல்லலாம். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மனக்குமுறல்களை ஒருவரிடம் கொட்டித் தீர்த்து விட்டாலே அவர்களின மனச்சுமை பாதியாக குறைந்து விடுகிறது. 

இந்நிலையில்தான், ஊரடங்கினால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு மற்றும் மதுவினால் தடம் புரண்டவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்குவதற்கான முன்னெடுப்புகளை 'நக்கீரன்' சார்பில் மேற்கொண்டோம். சேலத்தில், இலவசமாக மொபைல் போன் மூலமாக மனநல ஆலோசனை வழங்க சில மருத்துவர்கள், மன ஆலோசகர்களிடம் கேட்டோம். இதையறிந்த தோல் மருத்துவர் மேஜர் கனகராஜ், அவருடைய நண்பர்கள் இருவரை நம்மிடம் பரிந்துரை செய்தார். ஒருவர், மருத்துவர் பிரதீப். மற்றொருவர், மருத்துவர் தனராஜ் சேகர்.

சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் தனராஜ் சேகர், ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவரை தினமும் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இலவசமாக ஆலோசனை பெறலாம். அவரை, 97517 83771 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சேலம் தரண் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பிரதீப்பிடம் ஆலோசனை பெற விரும்புவோர், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அவரை 88723 77927 என்ற செல்போன் எண்ணில் அழைக்கலாம்.

இவர்களுடன், சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் விஜயும் இணைந்திருக்கிறார். இவர், தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகராக பணியாற்றி வருகிறார். விஜயை, தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை, 95002 12178 தொடர்பு கொள்ளலாம். 

மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள், குடிபோதையில் இருந்து மீள விரும்புவோர் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வரை மேற்குறிப்பிட்ட தன்னார்வ மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அவர்களுடைய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். தடை உத்தரவு அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே இந்த இலவச சேவை தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். 
 

Next Story

ஃபானி புயல் எதிரொலி ! ரூபாய் 1086 கோடி நிதியை ஒதுக்கிய மத்திய அரசு!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

ஃபோனி புயல் அதிதீவிர புயலாக மாறி வரும் நிலையில் ஒடிஷா மாநிலத்தில் நாளையோ அல்லது நாளை மறுநாளோ கரையை கடக்க உள்ளது. இதற்கிடையே மாநில அரசுகள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு தமிழகம் , ஒடிஷா , மேற்கு வங்காளம் , ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ரூபாய் 1086 கோடி நிதியை வழங்கியது. 
 

central government



மேலும் மத்திய உள்துறை அமைச்சகம்  மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இந்த நிதியை பயன்படுத்தி உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் , தேசிய பேரிடர் மீட்பு படைகள் மற்றும் தன்னார்வலர்கள் , ராணுவ வீரர் உள்ளிட்டோர்களை தயார் நிலையில் வைக்கவும் , புயல் குறித்து விவரங்களை  அவ்வப்போது மாநில அரசுகள் மத்திய உள்துறைக்கு உடனடியாக அனுப்ப அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே ஒடிஷா மாநிலத்தில் ஃபோனி புயல் கரையை கடக்கும் போது அதிக சேதங்களை ஏற்படுத்தும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க  மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.