Skip to main content

தயிர் சாப்பிட்டால் நல்லதா?

Published on 06/02/2019 | Edited on 09/02/2019

நம்மில் ஒரு சிலர் தயிரை விரும்பி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் ஒரு சிலர் தயிரா ஐயோ வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் .சரி தயிர் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதா இல்ல தீங்கு வரக்கூடியதா என்று பார்க்கலாம் .தயிர் சாப்பிடுபவர்களின் இரைப்பை குடல் பகுதிகள் சிறப்பான நிலையில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.  அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாது, அல்லது இடுப்புப் பகுதிகள் சுருங்கி விடும் என்று கூறுவார்கள்.  இதற்கு காரணம் தயிரில் உள்ள லேக்டோபாசிலி தான் என்றும் நம்புகின்றனர்.

curd food

ஆனால், லேக்டோபசிலி மனிதனின் குடல் பகுதியிலேயே அமைந்துள்ளன.  இந்த பாக்டீரியாக்களை குடல்பகுதியில் வாழும் பாக்டீரியாக்கள் என்று அழைக்கிறோம்.  வெளிப்பகுதியிலிருநுது பாக்டீரியா அல்லது வைரஸ்கள் வந்தால், அதனைத் தாக்கி அழிக்கும் தற்காப்பு அமைப்பு மனித உடலில் உள்ளது.  உடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியாக்கள் இருந்தால் கூட அந்த அமைப்பு அழித்துவிடும்.  இதேபோல தான், லேக்டோபசிலி பாக்டீரியா, உடலின் குடல் பகுதியில் இல்லாமல், வேறு பகுதிகளில் இருந்தால், அவை அழிக்கப்பட்டுவிடும். தயிரில் லேக்டோஸ்கள் அதிக அளவில் உள்ளன.  எனவே, நீங்கள் தயிரை சாப்பிட்டால், லேக்டோஸ் நொதிகள் கிடைக்காமல், அஜீரணம் ஏற்படும்.  அதாவது, தயிரை சாப்பிடும் பலருக்கு சிறிய அளவில் வயிற்றுப்போக்கு ஏற்படும்.  மலக்குடலில் தேங்கி நிற்கும் மலம், இதன்மூலம் வெளியேறும்.  இதனால் மலச்சிக்கலை தயிர் போக்குவதாக தவறாக கருதப்படுகிறது.


நாள்தோறும் தயிரை சாப்பிடும்போது, மலம் மற்றும் வாயு நாற்றமடிக்கும்.  இதன்மூலம், குடல் பகுதி சூழ்நிலை மோசமாகி விட்டதாக அறியலாம்.  மலக்குடல் பகுதியில் நச்சுப்பொருட்கள் உருவாவதே நாற்றம் வருவதற்கு காரணமாகும்.  தயிரை சாப்பிடுவதால், உடலுக்கு நல்லது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தாலும், உண்மையில், உடலுக்கு தயிர் ஏற்றதல்ல.  நாம் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வயதுக்கு வந்துவிட்டோம்.  மற்றவர்கள் தெரிவிக்கும் தகவல்களை நம்பிக் கொண்டிருக்காமல், நமது சொந்த உடலை சோதனை செய்து அதன்மூலம், உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.