Skip to main content

11 செமீ இறக்கை நீளமுள்ள கொசு சீனாவில் கண்டுபிடிப்பு!

Published on 24/04/2018 | Edited on 24/04/2018

உலகிலேயே மிகவும் நீளமான கொசு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Mosquito

 

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பகுதியில் உள்ளது சேங்க்டூ. இங்குள்ள மவுண்ட் குவின்செங் வனப்பகுதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா சென்றவர்கள், பறவைக்கு நிகராக நீளமான கொசுவைக் கண்டுபிடித்துள்ளனர். உலகின் மிக நீளமான இந்த வகை கொசுக்களை ஹோலோருசியா மிகாடோ என அழைக்கப்படுகின்றன. தற்போது இந்தக் கொசு சீனாவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்னர் ஜப்பானில் இதே இனத்தைச் சேர்ந்த கொசு கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதன் இறக்கை நீளம் வெறும் 8 செமீ மட்டுமே இருந்தது. தற்போது கிடைத்திருக்கும் இந்தக் கொசுவின் இறக்கை நீளம் 11.15 செமீ என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு பெரியதாக, அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், இந்தவகைக் கொசுக்கள் ரத்தம் குடிப்பதில்லை. மாறாக தேனை உறிந்து குடித்து உயிர்வாழ்கின்றன. மேலும், இவற்றின் வாழ்நாள் சில நாட்களே ஆகும். உலகில் பல ஆயிரக்கணக்கான கொசுக்கள் இருந்தாலும், நூறு இனங்களைச் சேர்ந்த கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடித்து தொல்லை செய்கின்றன. 

சார்ந்த செய்திகள்

Next Story

4 பேர் உயிரை பறித்த மின்சார கொசு விரட்டி; மூச்சுத் திணறி இறந்த சோகம்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

 Electric mosquito repellent leaked 4 people lost their life; Suffocated sadness

 

சென்னை மாதவரத்தில் கொசு விரட்டி உருகியதில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை மணலி எம்.எம்.டி.ஏ இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் உடையார். சொமேடோவில் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு உடையார் பைக் விபத்தில் சிக்கினார். தொடர்ந்து அவர் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்த்துக் கொள்வதற்காக அவரது தாயார் ஊரில் இருந்து வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 3 குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது மின்சார கொசு விரட்டி ஒன்றை ஆன் செய்துவிட்டு தூங்கியுள்ளனர். அப்பொழுது திடீரென அந்த மின்சார கொசு விரட்டி உருகி கீழே இருந்த அட்டைப்பெட்டியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் மின்சார கொசுவிரட்டி பாட்டிலில் இருந்து திரவமானது கீழே கொட்டி சிதறியது. அதிலிருந்து ஏற்பட்ட வாயு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதே நேரம் அட்டைப்பெட்டியில் தீப்பிடித்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த புகையில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது பேத்திகள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காலையிலிருந்து நீண்ட நேரம் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கும் சந்தேகம் ஏற்பட்டு காசல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவலைத் தொடர்ந்து, மாதவரம் பால் பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு 4 பேர் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொசு விரட்டி உருகி விழுந்து அதனால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

Next Story

உயிரைப் பறித்த கொசு விரட்டி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோகம்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

A deadly mosquito repellent; Tragedy of the death of six members of the same family

 

கொசு விரட்டி மருந்திலிருந்து உருவான புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டிலிருந்த ஆறு பேரும் இரவு முழுவதும் கொசு விரட்டி மருந்திலிருந்து வெளியான புகையை சுவாசித்தது தெரியவந்துள்ளது. கொசு விரட்டி மருந்திலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்து இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடற்கூறாய்வுக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.