Published on 27/10/2018 | Edited on 27/10/2018

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என கோரியிருந்தார். இந்த நிலையில் இலங்ககை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார். இன்று பகல் 12 மணி முதல் வரும் நவம்பர் 16-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.