Skip to main content

கொரிய தமிழ்ச்சங்க பொங்கல் விழா! - கவிஞர் வைரமுத்து, நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 


மதுரை தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் த. லலிதா அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:

 

அன்பில் தழைத்தோங்கி ஆன்றோரை வணங்கி இன்முகம் கொண்டே இயற்கையைப் போற்றி, பெரிதுவக்கும் இன்பமுற்று உழவரின் வாழ்வை உயர்த்தி எண்ணத்தின் வலிமையோடு தொன்மைத்தமிழுயர பண்பாட்டு விழாக்கள் நடத்தி தொண்மைத் தமிழுயர நாம் உயர்ந்து உளம் நெகிழ்ந்து அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு தமிழ்ப்பெருமைபோற்றிட பொங்கலின் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டிட வாழ்த்துகிறேன். கொரியாவில் தை மாதம் நிலவும் கடும் குளிரிலும் பொங்கல் நிகழ்வை நடத்தி தமிழ்ப் பண்பாட்டை பரப்பிடும் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் மக்களுக்கும் எனது வாழ்த்துகள், தமிழ் வாழ்க!

 

சியோல், தென்கொரியா, திருவள்ளுவர் ஆண்டு 2052, தைத்திங்கள் 18-ம் நாள் ஞாயிறன்று (31 சனவரி 2021) தமிழர் திருநாள் - 2021 இணையவழி இயங்கலையில் நடைபெற்ற கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 நிகழ்விற்கு தமிழ்நாட்டின் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் திருக்கோவிலூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு க.பொன்முடி அவர்கள் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார்.

 

Poet Vairamuthu, Nakkeeran editor wishes Korean Tamil Sanga Pongal festival!

 

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:
 

இந்த கரோனா சூழலிலும் தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் உரிய வழியில் பொங்கல் நிகழ்வை முன்னெடுப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்-கொரிய தொடர்பு குறித்து சில காணொளிகளை பார்த்தும் கேட்டும் வியப்படைந்தேன். வரும் காலங்களில் நானும் திமுக தலைவர் ஸ்டாலினும் கொரியாவிற்கு வருகை தருகிறோம் என்று கூறியிருக்கிறார்.

 

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:

 

Poet Vairamuthu, Nakkeeran editor wishes Korean Tamil Sanga Pongal festival!


கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு பொங்கல் வாழ்த்துகளைக்கூறி, மண், விண், மனிதர், விலங்கு என நான்கையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து தமிழர் திருநாள். இது தமிழனின் பெருமிதம். அனைத்து மதம் கடந்த ஆதி அடையாளம் வள்ளுவரை அழைத்துக்கொள்வோம். வாழ்வதற்கும் வாழ்த்துவதற்கும் என்று கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்டிருக்கிறார்.

 

நக்கீரன் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:
 

தொடர்ந்து நான்காவது முறையாக கொரிய தமிழ்ச்சங்கத்தின் நிகழ்விற்கு மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி!

 

Poet Vairamuthu, Nakkeeran editor wishes Korean Tamil Sanga Pongal festival!

 

பொங்கல் தமிழ் விழா! தமிழர் விழா! தமிழ்ப் புத்தாண்டு விழா "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனின் வாக்குபோல அனைவரும் கிழக்காசியாவின் ஒரு மூலையில் கொரியாவில் பொங்கலை கொண்டாடுகிறீர்கள்! அங்கு அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற நமது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பொங்கலை கொண்டாடிவருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அனைவரையும் இந்த காணொளி மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

மேலும், கரோனா பேரிடரை அங்குள்ள நமது மக்கள் அனைவரும் சமாளித்து விட்டீர்கள் என்பதை எமது நிறுவனத்தின் எழுத்தாளர் அண்ணன் ஆதனூர் சோழன் அவர்களிடம் பேசும்பொழுது தெரிந்துகொண்டேன். கடும்குளிரை பொருட்படுத்தாது நடைபெறும் விவசாயிகள் போராட்டம், தொற்றின் அறிவியல் புரிதலைக் கடைப்பிடிக்காமல் தேவைக்குத் தகுந்தவாறு மக்கள் கூடுவதைச் சேர்ப்பது தவிர்க்கச்சொல்வது போன்ற செயல்பாடுகளுக்கு நடுவே அனைத்தையும் கடந்து செல்கிறோம். பொங்கல் விழா என்பது தமிழர் அடையாளத்தை நிலைநிறுத்தி நமக்கு உதவி செய்த மூத்தோர்கள் மற்றும் இயற்கை என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு. பொங்கல் நிகழ்வில் உங்களை காணொளி ஊடகம் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

 

மூத்த எழுத்தாளர் ஆதனூர் சோழன் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:
 

cnc

 


கொரிய தமிழ்ச்சங்க தோழமைகளுக்கு வணக்கம்! தங்களோடு நெருங்கி பயணிப்பவன் என்கிற வகையில் கரோனா பெருந்தொற்று காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை அறிவேன். சிக்கலான சூழலிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் பல தலைவர்களையும் ஆளுமைகளையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் இயல்பில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவர்களாக இருப்பதால் சங்கத்தின் நிகழ்வுகள் மொழி வளர்ச்சி என்பதையும் தாண்டி அறிவியல், சமுக, மொழித்தொடர்பு ஆராய்ச்சி என புதிய கோணத்துடன் பயணிக்கிறீர்கள். உலகில் வேறு எந்த சங்கமும் பயணிக்காத புதிய பாதையில் மக்களுக்கு பயனுள்ள வகையில் கொரிய தமிழ்ச் சங்கம் பயணிக்கிறது. மீண்டும் உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்.


 
மக்களிசை பாடகர் திருமதி சின்னப்பொண்ணு குமார் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:

 

Poet Vairamuthu, Nakkeeran editor wishes Korean Tamil Sanga Pongal festival!

 

நமது உழவு செழித்து நெல் பத்தாயங்கள் நிரம்ப இயற்கைக்கு நன்றிகூறி நாம் கொண்டாடும் பொங்கலை கொரிய மண்ணில் முன்னெடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு நன்றிகள். அடுத்தமுறை அங்கு எம்மைப்போன்ற கலைஞர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட சூழல் இடமளிக்கும் என நம்புவோம் என்றார்

 

திரு பாட்சா, இரசிய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், சென்னை,

 

தாய்த்தமிழ் உறவுகளுக்கு எனது பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழ்நாட்டைவிட்டு கடல் கடந்து சென்றாலும், தமிழரின் பண்பாடு மற்றும் அடையாளங்களை மறக்காமல் பொங்கல் நிகழ்வை முன்னெடுக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துகள். உங்களுக்கு வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடைத்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர்; ஆஸ்திரேலியா நீதிமன்றம் அதிரடி! 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

australia overseas friends of the bjp leader balesh dhankhar related court judgement

 

ஆஸ்திரேலியாவில் உள்ள  சிட்னியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர். பாஜக பிரமுகரான இவர்  'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் தி  பி.ஜே.பி' எனும் பாஜகவின் வெளிநாட்டு உறுப்பினர்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் பாலேஷ் தன்கர் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் பல பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்து பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோவில் இருந்த பெண்களில் சிலர் சுயநினைவில்லாமல்  போதையில் இருந்துள்ளனர். அந்த விடீயோக்களில் இருந்தவர்களில் பெரும்பாலும் கொரிய நாட்டைச் சேர்ந்த  பெண்களாக இருக்கும் என போலீசார் கருதினர். இது மட்டுமின்றி பாலேஷ் தன்கர் மீது ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக ம குற்றம் சாட்டப்பட்டது.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  இவ்வழக்கு சிட்னி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்  தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாலேஷ் தன்கர் போதைப் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் பெண்களை பாலியல் கொடுமை செய்துள்ளார். இணையதளம் மூலம் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து  தனிமையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்  5 கொரிய பெண்களை தாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடி வரும் கொரிய பெண்களை தன்னுடைய பாலியல் இசைக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் பெண்களுக்கு மது அல்லது ஐஸ் கிரீமில்  மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து இவரிடம் தட்டிக்கேட்ட பெண்களை தாக்கியுள்ளார். மேலும் தனது படுக்கை அறையில் உள்ள கடிகாரத்தில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் பெண்களுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளையும், தன்னுடன் ஒத்துழைக்காத பெண்களை தாக்கும் காட்சிகளையும் அந்த கேமிரா மூலம் பதிவு செய்துள்ளார். இதன் பதிவுகளை போலீசார் கைப்பற்றியதன் அடிப்படையில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.