Skip to main content

கோவில் மரத்திற்கு முன்பு எக்குத்தப்பாக புகைப்படம்... சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகி

Published on 08/05/2022 | Edited on 09/05/2022

 

Photo taken in front of the temple tree ... Model in controversy

 

700 வருட பாரம்பரியம் கொண்ட கோவில் முன் அமைந்துள்ள புனித மரத்திற்கு முன்பு ரஷ்ய மாடல் அழகி ஒருவர் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தோனேஷியாவில் உள்ள பாலி என்ற இடத்திற்கு சுற்றுலா வந்த ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி அலீனா ஃபஸ்லீபா, தபனான் என்ற இடத்தில் உள்ள 700 வருட பழமையான மரத்தின் முன்பு நிர்வாணமாக புடைபடம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அங்குள்ள உள்ளூர் மக்களால் அந்த மரம் புனிதமாக போற்றப்படும் நிலையில் அலீனாவின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஷ்ய மாடல் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்தோனேஷியாவின் ஐ.டி.இ சட்டத்தின்படி இந்த குற்றத்திற்கு அபராதத்தோடு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை மாடல் அழகி இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியத்துடன் இதுதொடர்பாக மன்னிப்பும் கோரியுள்ளார். அந்த மரத்தின் வரலாறு, புனிதம் குறித்து தமக்கு தெரியாது என்று தெரிவித்துள்ள அவர், அங்கு மீண்டும் சென்று அந்த மர்த்திற்கு முன்பு அமர்ந்து மன்னித்துக்கொள்ளும்படி மனம் உருகி வேண்டிக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.