Skip to main content

கூகுள் அஸிஸ்டெண்ட் இனி இந்த வேலையை மட்டும் செய்யாது...?

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

கூகுள் அஸிஸ்டெண்ட் மூலமாக ஸ்மார்ட்ஃபோன்களில் பல வேலைகளை எளிதில் செய்துக்கொள்ள முடியும் அதில் ஒன்றாக ஃபோனை அன்லாக் செய்வது. அதில் ஃபிங்கர் பிரிண்ட், ஃபேசியல் ரெக்ககனைஷன் மற்றும் குரலை வைத்து அன்லாக் செய்வது. இதில் தற்போது கூகுள் நிறுவனம் குரலை வைத்து ஃபோனை அன்லாக் செய்யும் முறையை நீக்க முடிவுசெய்துள்ளது. 

 

voice unlock

 

சில போலி இணையதளங்களின் மூலம் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுவதும், ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாக  மாறி வருகிறது.  இந்நிலையில் கூகுளின் குரலை வைத்து ஸ்மார்ட்ஃபோனை அன்லாக் செய்யும் முறையை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

 

மோட்டோ Z மற்றும் பிக்சல் XL ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களில் குரலை வைத்து ஃபோனை அன்லாக் செய்யும் முறையை கூகுள் நிறுவனம் ஏற்கனவே 9.27 அப்டேட்டிற்கு பிறகு நிறுத்திவிட்டது. இதனையடுத்து மற்ற ஸ்மார்ட்ஃபோன்களிலும் ஓகே கூகுள் என கூறி ஃபோனை அன்லாக் செய்யும் வசதியும் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. 
 

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள பிக்சல் 3XL ஃபோனில் இந்த வசதியை நீக்கியுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த பல்வேறு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த அன்லாக் வசதி நீக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தீபாவளிக்கு மக்கள் கூகுளில் தேடியது என்ன? 

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

What did people search on Google for Diwali?

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 மற்றும் 13ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். அதேசமயம், உ.பி. மாநிலம் அயோத்தியில் சுமார் 24 இலட்சம் அகல் விளக்கை ஒரே சமயத்தில் ஒளிரவிட்டு, கின்னஸ் சாதனை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுவர்கள் அந்த விளக்கில் இருந்து எண்ணெய்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உ.பி. மட்டுமின்றி இதே ஏழ்மை நிலையில் நாடு முழுக்க பலர் தங்கள் தீபாவளியைக் கழித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இது ஒருபுறம் இருக்க, பண்டிகை அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போதும் நமது மக்கள் கூகுளை நாடுவது மரபாகவே மாறிவிட்டது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகளவில் கூகுளில் என்ன தேடினர் என்பதை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ளார். 

 

What did people search on Google for Diwali?

 

கூகுளில் அதிகம் தேடப்பட்டத்தில் முதல் 5 இடத்தைப் பிடித்த தேடலை அவர் வெளியிட்டுள்ளார். அதிலும், ஏன் எனும் கேள்வியுடன் தேடப்பட்டதை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, கூகுளில் இந்த தீபாவளிக்கு மக்களால் அதிகம் தேடப்பட்டவை; 

 

1. இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?


2. தீபாவளிக்கு ஏன் ரங்கோலி வரைகிறோம்?


3. தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்?


4. தீபாவளி அன்று ஏன் இலட்சுமி பூஜை செய்கிறோம்?


5. தீபாவளி அன்று ஏன் எண்ணெய் குளியில் எடுக்கிறோம்?


எனும் ஐந்து விஷயங்களை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.