Skip to main content

ஆண் சிங்கத்தைக் கொன்ற பெண் சிங்கம்...!

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

அமெரிகாவில் உள்ள இண்டியானா மாகாணத்தில், இண்டியானாபோலீஸ் எனும் பூங்கா இருக்கிறது. இதில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே கூண்டில் சுரி எனும் பெண் சிங்கமும் நியாக் எனும் ஆண் சிங்கமும் ஒன்றாக வசித்துவந்துள்ளன. இந்த ஜோடி கடந்த 2015-ஆம் ஆண்டு மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. 

 

LL

 

சில மாதங்களாகவே இந்த சிங்க ஜோடிகள் சண்டையிட்டு வந்துள்ளன. இந்த நிலையில் சுரி எனும் பெண் சிங்கம் நியாக் எனும் ஆண் சிங்கத்தை தாக்கியுள்ளது. அதன் பின் நியாக்கின் கழுத்தை நெரித்துள்ளது. இதனை பூங்கா ஊழியர்கள் தடுக்க முயன்றுள்ளனர் ஆனால் தடுக்க முடியாமல் இறுதியில் நியாக் இறந்துவிட்டது.  

சார்ந்த செய்திகள்