Skip to main content

"அரைநிர்வாண நிலையில் நிக்கவைத்து அசிங்கப்படுத்திய போலீஸ்.. அவமானத்தில் விஷம் குடித்த இளைஞர்..!"

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டது எப்போதும் வென்றான் காவல் நிலையம். நேற்று முன்தினம் சிவராத்திரி என்பதால், அருகே உள்ள ஆதனூர் கோவிலுக்கு எப்போதும் வென்றானை சேர்ந்த தமிழ்செல்வம் (21) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

 

police

 

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ.அருள்ராஜ், சந்தேகத்தின் பேரில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி வண்டியின் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது வண்டியின் ஆவணங்களை கேட்டதற்கு, வண்டி உரிமையாளர் தாம் அல்ல என்றும் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வண்டி என்றும் கூறியிருக்கிறார்.

 

 

வண்டியை கைப்பற்றிய போலீஸார், ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அனுப்பிவிட்டனர். ஸ்டேசனுக்கு தனது நண்பர் இளையராஜா உடன் சென்ற தமிழ்செல்வம் வண்டியை தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் உரிமையாளர் மணிகண்டன் ஆவணங்களுடன் வந்தால் தான் வண்டியை விடுவிப்போம் என்று கறாராக காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.

 

police

 

இந்த காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ அருள்ராஜ் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. ஏற்கனவே சரித்திர பதிவேட்டில் மணிகண்டன் என்பவருடைய பெயர் இருந்ததால், அந்த மணிகண்டன் தான், இந்த வண்டியின் உரிமையாளர் என நினைத்து வண்டியை ஒப்படைக்கவில்லை. (ஆனால் காவல்நிலைய பட்டியலில் உள்ள மணிகண்டன் வேறு நபர்) இந்த மணிகண்டன் அன்றைய தினம் மதுபோதையில் இருந்ததால், காவல் நிலையத்திற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

 

தமிழ்செல்வமும், இளையராஜாவும் வண்டியை கேட்டு அடம்பிடித்ததால், இருவரையும் ஸ்டேஷனில் ஜட்டியோடு நிற்கவைத்து விசாரித்து அனுப்பி உள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்செல்வம் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் இன்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

காவல் துறைக்கு இது புதிதல்ல..

 

காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களை போலீஸார் ஒருமையில் திட்டுவதும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதும் புதிதல்ல. நூற்றுக்கு 95 சதவீத ஸ்டேசன்களில் இந்த அத்துமீறல் தொடரத்தான் செய்கிறது. குற்றவாளியையும் சக மனிதனை போல் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையமும் அறிவுறுத்தினாலும் அதையெல்லாம் காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. இப்போது மதுரை மாவட்டத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றும் ஜெயபாண்டியன், இதற்கு முன்பு பணியாற்றிய காவல் நிலையத்தில், முதியவர் ஒருவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதில், மன உளைச்சலில் அவர் இறந்தே போனார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்தபோது, முதியவருக்கும் அந்த சம்பவத்திற்கும் தொடர்பே இல்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு வரும்போது அந்த முதியவர் உயிருடன் இல்லை.

 

 

அந்த பிரச்சனையால் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார் விஜயபாண்டியன். அங்கும் முதியவர் ஒருவரை ஒருமையில் பேசி, தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தினார். அவர் மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டார். விசாரித்த நீதிபதி ஜெயபாண்டியனுக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.