Skip to main content

மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னுசாமி. இவரது மகள் 25 வயது ஜெயக்கொடி. மனநிலை பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண்ணை வீட்டிலேயே பத்திரமாக பார்த்து கொண்டு இருந்துள்ளனர் பொன்னுசாமியின் குடும்பத்தார்.

women incident police arrested one person


இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பதுரு என்ற 60 வயது முதியவர் மனநிலை பாதிக்கப்பட்ட ஜெயக்கொடியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தந்தை பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் துறையினர் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்