Skip to main content

வெட்டுக்கோட்டையா? புதுக்கோட்டை.. சிலமணி நேரத்தில் 3 சம்பவம், 5 பேர் காயம்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே , ஆட்சியர் அலுவலகம் அருகே என ஒரே நாளில் 3 சம்பவங்களில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இச்சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

attack

 

 

 

சம்பவம் - 1

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் உள்ள புங்கினிபட்டியை சேர்ந்த  தர்மேந்திரன், கன்ணையா, சித்திரைவேலு, ஆறுமுகம் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த கேசவன், மணிகண்டன், பாலசுப்பிரமணி தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தர்மேந்திரன் தரப்பினர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரை அடுத்து இலுப்பூர் காவல் துறையினர் விசாரணைக்காக பொன்னையா, கேசவன், மாணிக்கம், பாலசுப்பிரமணி உள்ளிட்ட 4 பேரை நேற்று இலுப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

 

attack

 

 

 

இந்நிலையில் இலுப்பூர் காவல் நிலையத்திற்கு சென்ற கன்னையா, சித்திரைவேலு, தர்மேந்திரன், ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேர் காவல் நிலையம் அருகே  விசாரணைக்காக  காத்திருந்த பொன்னையா, கேசவன், மாணிக்கம், பாலசுப்பிரமணி உள்ளிட்ட 4 பேரை மறைத்து வைத்திருந்த கத்தி , இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

 

 

இதில் கேசவன், மணிகண்டன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். காவல் நிலையம் அருகே விசாரணைக்காக அழைத்துவரப்பட  நபர்களை ஆயுதங்களை வைத்து தாக்கிவிட்டு தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காவல் நிலைய வாசலில் நடந்த சம்பவத்திற்கு போதிய போலீசார் இல்லாததே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

 

சம்பவம் - 2

 

இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருவப்பூர் காட்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த பைனான்சியர் வெள்ளைச்சாமி என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் ஒட ஒட விரட்டி வெட்டபட்டார். இதில் படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்கா திருச்சி அனுப்பி வைக்கப்பட்டார். 

 

சம்பவம் 3 


இந்த நிலையில் புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த வெங்கடேஷ் என்பரை அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகம், காவல்  நிலையம் அருகில் ஒரே நாளில் 3 சம்பவங்களில்  5 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.