Skip to main content

'பேட்ட', 'விஸ்வாசம்' ரெண்டில் எது ஓடும்? 'நடிகர்' நாஞ்சில் சம்பத் பேட்டி!

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
viswasam petta



அடுத்த எம்.ஜி.ஆரா சிம்பு? 'பேட்ட', 'விஸ்வாசம்', 'எல்.கே.ஜி.' பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இலக்கியவாதியும், நடிகருமான நாஞ்சில் சம்பத். 
 

நீங்க நடிக்கும் 'எல்.கே.ஜி.' பொங்கலுக்கு வரவில்லையே?
 

'பேட்ட', 'விஸ்வாசம்' வருவதால் இப்போது வரவில்லை. இடைவெளிவிட்டு வெளியிடலாம் என நினைத்திருக்கிறார்கள். 
 

'பேட்ட', 'விஸ்வாசம்' படங்கள் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இரு படங்களின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதைப்பற்றி...
 

இளைய தலைமுறையைச் சார்ந்த தம்பிகளெல்லாம் அஜீத்தினுடைய ரசிகர்கள்தான். அஜீத்தை நம்பி எடுக்கப்பப்பட்ட படம். அஜீத்துக்காகவே எடுக்கப்பட்ட படம் 'விஸ்வாசம்'. 
 

ரஜினியின் 'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கென்று தமிழகத்தில் ஒரு செல்வாக்கு இருக்கிறது. இன்று வாலிபர்களை வசீகரித்திருக்கின்ற கதாநாயகர்களில் அவரும் ஒருவர். படம் தயாரிக்கிறார். அவருடைய களிறு போன்ற கண்களும், அவருடைய தத்ரூபவமான நடிப்பும், அவருக்கு ஒரு பெரிய வரவேற்பை தமிழகத்தில் தந்திருக்கிறது. அதுபோதாதென்று சுப்பிரமணியபுரம் சசிக்குமாரும் நடித்திருக்கிறார். அதனால் ரஜினிக்காக ஓடாவிட்டாலும், விஜய் சேதுபதி, சசிக்குமாருக்காக அந்தப் படம் ஓடும். இரண்டு படங்களுமே ஓடும். 

 

simbu seeman


 

எல்லோரிடத்திலும் கதை சொன்னேன். நடிக்க பயந்தார்கள். சிம்புதான் ''நான் நடிக்கிறேன்'' என்றார். அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர். என்றால், அண்ணனுக்கு (சீமான்) நீதான் என்றேன். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனி சிலம்பரசன்தான். சிம்புதான் ரியல் ஹீரோ என்று சமீபத்தில் மேடை ஒன்றில் பேசியிருக்கிறாரே சீமான்...

 

சிம்பு நல்ல நடிகர். நல்ல பண்பாளர். நடிகர் டி.ராஜேந்தரின் செல்வப் புதல்வன். சமீபத்தில் அவருடைய  செக்கச் சிவந்த வானம் பார்த்தேன். அதில் முத்திரை பதித்திருந்தார். அப்படி இயக்குநர் சீமான் என்ன கதை வைத்திருக்கிறார், என்ன கதை சொன்னார் என்று தெரியவில்லை. அதை துணிச்சலாக ஏற்றுக்கொண்ட சிம்புவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். அடுத்த எம்.ஜி.ஆர். என்று அவரை ஆராதிப்பதில் ஏதாவது அரசியல் இருக்குமா என்று தெரியவில்லை. படம் வந்த பிறகு பார்க்கலாம்.
 

Nanjil Sampath


 

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டதை எப்படி நினைக்கிறீர்கள்?
 

கஜா புயலை விட கொடூரமானது இந்த முடிவு. ஜனநாயக தேவதை ரத்தக்கொதிப்பில் இருக்கிறாள். பெரும்பாண்மை இல்லாத ஒரு அரசு ஆடுகிற தப்பாட்டத்தை யாருடைய ஆசியோடோ நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.