Skip to main content

தமிழ் தாத்தா உ.வே.சா.வின் 167வது பிறந்தநாள் அமைச்சர்கள் மரியாதை.. (படங்கள்)

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயரின் 167வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகிலுள்ள படத்திற்குத் தமிழக அரசு சார்பாக மரியாதை செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மா.ஃபா. பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இதில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, செய்தித் துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன், செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் முடிவில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

சார்ந்த செய்திகள்