Skip to main content

மாணவனின் உயிரை பறித்த கல்விக் கட்டணம்..! 

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Tuition fees that took the life of a student ..!

 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ஆண்டிபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் 20 வயது விஷ்ணு. இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி  ஒன்றில் இறுதியாண்டு பி.இ. சிவில் பொறியாளர் பட்டம் படித்து வருகிறார். இவருக்குக் கல்லூரியிலிருந்து கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விஷ்ணு தனது பெற்றோரிடம் கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்துவதற்குத் தகவல் வந்துள்ளது குறித்துத் தெரிவித்துள்ளார். 

 

அப்போது அவரது பெற்றோர்கள் தற்போது கையில் பணம் இல்லை பிறகு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதனால் விஷ்ணு, கல்விக்கட்டணம் செலுத்த உடனடியாக பணம் தரவில்லையே என்று மனவேதனையிலிருந்து வந்துள்ளார். விஷ்ணுவுக்குக் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தைப் பெற்றோர் ஏற்பாடு செய்து தருவதற்குள் மனமுடைந்த விஷ்ணு, கடந்த 14ஆம் தேதி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். 

 

தகவல் அறிந்த அவரின் பெற்றோர் கதறித் துடித்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிதம்பரத்திலுள்ள ராஜா அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், புதுச்சேரிக்குச் செல்லும் வழியிலேயே விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து சோழதரம் போலீஸார் விரைந்து வந்து விஷ்ணு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அங்குப் பிரேதப் பரிசோதனை முடிந்த விஷ்ணுவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விஷ்ணு தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் சோழதரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீசாஸார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவின் மரணத்திற்குக் கல்லூரி கல்விக் கட்டணம் கட்டுவது காரணமா வேறு ஏதேனும் காரணம் உண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.