தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அரசு மருத்துவமனையில் (மிகச் சொற்ப தொகுப்பூதியத்தில்) பணிபுரிந்து வரும் ஒப்பந்தச் செவிலியர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.