Skip to main content

மகிழ்வித்த கலைஞனின் மறைவுக்குப் பின்னால் இருக்கும் சோகம்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

 The tragedy behind the demise of the delighted artist !!!

 

விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்று நடித்ததால் 'வடிவேல் பாலாஜி' என புகழ் பெற்றவர்.

 

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உடல் மொழியுடன் தனது உடல் மொழியையும் கலந்து மக்களை மகிழ்வித்து வந்தவர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த பாலாஜி நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்து வாய்ப்புகள் தேடிய நிலையில், சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து காமெடி நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளையும், உடல் மொழிகளையும் வெளிப்படுத்தி சின்னத்திரையில் மக்களை மகிழ்வித்து வந்தார்.

 

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி. பொருளாதார பிரச்சனை காரணமாக அங்கிருந்து வேறு ஒரு சிறிய தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதன்பின், வீட்டுக்கு வந்த அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத் துடிப்பு சீராக இல்லாததால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,  நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இந்நிலையில் இன்று வடிவேல் பாலாஜி (வயது 42) உயிரிழந்தார்.

 

 The tragedy behind the demise of the delighted artist !!!


மருத்துவமனையில் இருந்து அவரின் உடல் சேத்துப்பட்டில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், நண்பர்கள் என அனைவரும் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மதியம் 2 மணிக்கு சேத்துப்பட்டில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து அவருடன் பணியாற்றிய பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதன்படி  சின்னத்திரையில் பிரபலமான அறந்தாங்கி நிஷா கூறுகையில், கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், கரோனா காரணமாக வீட்டிலேயே இருந்ததால் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். கரோனா பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தாலும் அவர் பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சியில் தற்பொழுது நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்ட நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபொழுது அவர் இதை தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் நிஷா.

 

 The tragedy behind the demise of the delighted artist !!!


இப்படி ஏற்படும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவர் மட்டுமல்ல எங்களைப் போன்ற சின்னத்திரை பிரபலங்கள் மேடைகளில் உங்களைச் சிரிக்க வைக்கிறோம் ஆனால் எங்கள் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் சோகங்கள் உங்களுக்குத் தெரிந்தால் எங்களை அடுத்தமுறை பார்க்கும்போது உங்களுக்கே சிரிப்பு வராது. அது உங்களுக்கு தெரியாத வரைக்கும் தான் நாங்க நல்லா இருப்போம். நீங்க சிரிச்சுதான் நாங்க மூணு வேளை சாப்பிடுறோம். அதுபோன்ற வாழ்க்கைச் சூழல்தான் சின்னத்திரை கலைஞர்களுடையது. எங்களுக்கென்று சங்கம் இல்லை. பணம் இல்லாததால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால், கடைசியில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் இறந்தும் விட்டார்.

 

Ad

 

அதோடு அவர், அவரது மனைவி குழந்தைக்கு ஏதாவது சேர்த்து வைத்து உள்ளாரா என்பது கூட தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல சின்னத்திரையில் இருக்கும் எங்களைப் போன்றவர்ளுக்கும் அதே நிலைமைதான். கரோனா காலத்தில் இப்பொழுதுதான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால்தான் எங்களுக்கு வருமானமே. அதைவிட்டால் வேறு வழியே இல்லை. அவருடைய மறைவு எங்களுக்கு இன்னும்கூட நம்ப முடியவில்லை. இது வதந்தி ஆக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் விசாரித்ததில் அவர் உண்மையாக இறந்துவிட்டதாக கூறிய பொழுது எனக்குச் சொல்ல வார்த்தைகளே இல்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் அவருடன் பணியாற்றிய பல்வேறு சின்னத் திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இறுதி இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.