உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 2500க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை 2,789 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை 411 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், 7 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் மட்டும் 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#CODVID19 TN STATS 03.04.20:
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 3, 2020
Screened Passengers: 2,10,538
Beds in Isolation Wards: 23,689
Ventilators: 3,396
Current Admissions:1,580
Samples Tested: 3,684 (Negative:2789, Positive: 411 (Discharged:7), Under Process: 484)
#TN_Together_AgainstCorona @MoHFW_INDIA