Published on 04/09/2019 | Edited on 04/09/2019
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
![Serious complaint at bigbass Madhumitha police station](http://image.nakkheeran.in/cdn/farfuture/lw3Df-1lNxWpImWnr4w_Hq2W5f9qP3ITI5ncqffDDYE/1567608010/sites/default/files/inline-images/z11_11.jpg)
தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா தபால் மூலம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை, தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56 வது நாளில் வலுக்கட்டாயமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.