Skip to main content

எஸ்.பி.பி உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது -மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

gh

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து சில வாரங்களுக்கு முன் பல்வேறு வதந்திகள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. அவரது மகன் எஸ்.பி.பி சரணும் இதுதொடர்பாக விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்