Skip to main content

இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! மாமனார் உட்பட மூவர் மீது வன்கொடுமை வழக்கு!     

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

salem police registered case on Father in Law and husband of woman

 

வாழப்பாடி அருகே, மகன் ஊரில் இல்லாத நேரத்தில் மருமகளை தனிமையில் இருக்க அழைத்த மாமனார் உள்ளிட்ட மூன்று பேர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி பிரவீணா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). வெங்கடேஸ்வரன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். வடமாநிலங்களுக்கு லாரியை ஓட்டிச்சென்றால், திரும்பி வர 10 நாள்களுக்கு மேல் ஆகும். கணவருடைய தந்தை பச்சமுத்து, தாயார், தனலட்சுமி ஆகியோரும் இவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். 


மகன் ஊரில் இல்லாத நேரங்களில் மருமகளிடம் மாமனார் பச்சமுத்து சில நேரம் தவறாக நடக்க முயன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 20ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த பிரவீணாவிடம் அவருடைய மாமனார் மீண்டும் தவறாக நடக்க முயன்றார். தந்தை ஸ்தானத்தில் இருந்து கொண்டு, தன்னிடம் தவறாக நடந்து கொள்ளலாமா? என பிரவீணா, மாமனாரை திட்டியுள்ளார். கோபம் அடைந்த பச்சமுத்து, தனது ஆசைக்கு இணங்காததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியே போ என விரட்டியுள்ளார். மேலும், மருமகளை தாக்கியுள்ளார். 


வெளியூரில் இருந்து வீடு திரும்பிய தன் கணவரிடம், வீட்டில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளைச் சொல்லி பிரவீணா அழுது புலம்பியுள்ளார். ஆனால் கணவரும், மாமியாரும் பச்சமுத்துவை கண்டிக்காமல் இருந்ததோடு, அவரின் நடத்தையை விமர்சனம் செய்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பிரவீணா, மாமனார் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தை, தன்னுடைய தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார். அவரும் நேரில் வந்து விசாரித்தபோது, அவரையும் பச்சமுத்து ஆபாசமாக திட்டி அனுப்பியுள்ளார். 


இதையடுத்து பிரவீணா, வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், மருமகளை தனிமையில் இருக்க அழைத்த மாமனார் பச்சமுத்து மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர்.


தலைமறைவாக உள்ள மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.