Skip to main content

சேலம்: 10 ஆண்டுகளாக 'உள்ளே' இருந்த 30 கைதிகள் விடுதலை!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

 

s j


சேலம் மத்திய சிறையில் பத்து ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்த 30 கைதிகள் இன்று (செப். 21, 2018) விடுதலை செய்யப்பட்டனர்.


எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறு அல்லது சூழ்நிலைகளால் குற்றவாளிகளாக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.


அதன்படி, மாநிலம் முழுவதும் இதுவரை 500க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை சேலம் மத்திய சிறையில் இருந்து 22 கைதிகள் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.


இந்நிலையில், இன்று மேலும் 30 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்படும்போது, திருந்தி வாழ வேண்டும் என்றும், மீண்டும் குற்ற வழிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். 


விடுதலை ஆன கைதிகளை வரவேற்று அழைத்துச்செல்ல அவர்களின் உறவினர்கள் சிறை வாயில் முன்பு கூடியிருந்தனர். வெளியே வந்த கைதிகளை அவர்களின் உறவினர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் சிறைக்குள் சாராய ஊறல்; காவல்துறை அதிர்ச்சி!

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Salem Prison Affair; Police shocked!

 

சேலம் சிறை வளாகத்திற்குள் மண்ணுக்குள் புதைத்து வைத்து, கைதிகள் சாராய ஊறல் போட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. 

 

சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள்  அலைப்பேசி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் கொடுக்கும் வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, சப்போட்டா உள்ளிட்ட பழங்களைக் கொண்டு கைதிகள் சிலர் சாராய ஊறல் போடுவதாகச் சிறை நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.     

 

இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் தலைமையில் காவலர்கள், சிறை வளாகம் முழுவதும் தீவிரமாகச் சோதனை செய்தனர். 7வது தொகுப்பு  அருகில், மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைக் கைப்பற்றினர். அதில், 2 லிட்டர் தண்ணீர், திராட்சை, சப்போட்டா, வாழைப்பழங்களைப் போட்டு, காற்றுப் புகாதவாறு மூடி, புதைத்து வைத்து ஊறல் போட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சாராய ஊறலை சிறைக்காவலர்கள் கைப்பற்றி அழித்தனர். ஊறல் போட்டது யார்? அவர்களுக்கு காவலர்கள் யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.