Skip to main content

காந்தியை அவமானப்படுத்தியவர்களுக்கு ஆட்சியாளர்கள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை -கண்ணீர்விட்ட வைகோ!

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை திருச்சியில் தொடர்ச்சியாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ கல்லூரி மாணவர்களிடமும், அரங்கு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இஸ்லாமும், தமிழும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ மாணவர்களை பார்த்து தம்பிகளே என்று கூறிய அவர், பின்னர் திடீரென மாணவர்களை தம்பிகளே என்று அழைக்க கூடாது என்று கருதி, தனக்கு வயது அதிகம் என்றும் தங்கள் வயதில் தனக்கு பேரன் இருப்பதாகவும் கூறினார்.

 

 The rulers have not even condemned those who insulted Mahatma - the sweetheart Vaiko!

 

உ.பி மாநிலத்தில் காந்தி நினைவு நாளில் அவருடைய உருவபொம்மையை தீயிட்டு எரிப்பதாகவும், துப்பாக்கியால் சுட்டு முழக்கங்களை எழுப்பியும் காலில் போட்டு மீதித்தும் அவமானப்படுத்தியவர்களுக்கு ஆட்சியாளர்கள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போது அவர் குரல் உடைந்து தடுமாறி கண்ணீர் விட ஆரம்பித்தது. அங்கே இருந்த மாணவர்களிடம் பெரிய அமைதியை ஏற்படுத்தியது. 

 

தோல்வியை பற்றி பேசுவதற்கு எனக்கு முழு தகுதி உள்ளது. ஏனெனில் அதிக தோல்விகளை சந்தித்தவன், நான் அரசியலில் தோற்றுள்ளேன், ஆனால் என் வாழ்வில் தோல்வியே கிடையாது. "நான் ஓர் போராளி, எனக்கு தோல்வியே கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வருகிறேன்.

 

மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும்தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன், என்றார்.

 

 The rulers have not even condemned those who insulted Mahatma - the sweetheart Vaiko!

 

இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே தான் உயிருடன் இருப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார். வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் , இளைஞர்களை அரசியலுக்கு அழைக்க வில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தை இளைஞர் தான் காப்பாற்ற வேண்டும். எனவே தான் அவர்களுக்கு வரலாற்றை எடுத்து கூறுகிறேன். உலகின் முதல் மொழி தமிழ் மொழி அதை காக்க ரத்தம் சிந்திய மாநகரம் திருச்சி என்று பேசினார். 

 

கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், தலைமை வகித்தார். செயலாளர் காஜா நஜீமுதீன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் முன்னிலை வகித்தனர். வைகோ அவர்கள் மனைவி மற்றும் திருச்சி மகப்பேரு மருத்துவர் மாநில மகளிர் அணி செயலாளர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் சேரன் மற்றும் சோமு உள்ளி கட்சியினரும் ஏராளமான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.